முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா முதல் இன்னிங்சில் 201 ரன்னில் ஆல்-அவுட்

வியாழக்கிழமை, 30 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

பிரிட்ஜ்டவுன், ஜூன். 30 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக பிரிட்ஜ்டவுன் நகரில் நடந்து வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னி சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 201 ரன்னில் ஆட்டம் இழந்தது. 

பின்பு முதல் இன்னிங்சைத் துவக்கிய மே.இ.தீவு அணி இந்திய பெளலர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. அந்த அணி 30 ரன்னில் 3 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது. இந்திய அணி தரப்பில், வி.வி.எஸ். லக்ஷ்மண் மற்றும் சுரேஷ் ரெய்னா இருவரும் அபாரமாக பேட்டிங் செய்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதனால் இந்திய அணி 200 ரன்னைத் தாண்டி கெளரவமான ஸ்கோரை எட்டியது. 

மே.இ.தீவு மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி பார்படோஸ் தீவில் பிரிட்ஜ்டவுன் நகரில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் டாசில் வெற்றி பெற்ற மே.இ.தீவு அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி தரப்பில் முரளி விஜய் மற்றும் முகுந்த் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

ஆனால் முதலில் களம் இறங்கிய இந்திய அணி ரன் எடுக்க திணறியது. இறுதியில் அந்த அணி 68 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 201 ரன்னில் ஆட்டம் இழந்தது. இந்திய அணி தரப்பில் 2 வீரர்கள் அரை சதம் அடித்தனர். இந்திய அணியின் அனுபவமிக்க வீரரான லக்ஷ்மண் அதிகபட்சமாக, 146 பந்தில் 85 ரன்னை எடுத்தார். இதில் 12 பவுண்டரி அடக்கம். இறுதி 

யில் அவர் பிஷூ வீசிய பந்தில் பரத்திடம் கேட்ச் கொடுத்து வெளியே

றினார். அவருக்கு பக்கபலமாக ஆடிய ரெய்னா 105 பந்தில் 53 ரன்னை எடுத் தார். இதில் 7 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் பிஷூ வீசிய பந்தி ல் பரத்திடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். லக்ஷ்மண் மற்றும் ரெய்னா இருவரும் இணைந்து 5 -வது விக்கெட்டிற்கு 117 ரன்னைச் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அணி தரப்பில், லக்ஷ்மண் மற்றும் ரெய்னா இவருவர் மட்டுமே தாக்குப் பிடித்து ஆடினர். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பியது நினைவு கூறத்தக்கது. மே.இ.தீவு அணி சார்பில், ராம்பால் 38 ரன்னைக் கொடுத்து 3 விக்கெ

ட் எடுத்தார். எட்வர்ட்ஸ் 56 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். பிஷூ 46 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, சம்மி 1 விக்கெட் எடுத்தார். 

பின்பு முதல் இன்னிங்சைத் துவக்கிய மே.இ.தீவு அணி ஆட்ட நேர முடிவில், 12 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 30 ரன்னை எடுத்து இருந்தது. அப்போது, சர்வான் 10 ரன்னுடனும், பிஷூ கணக்கைத் துவக் காமலும் களத்தில் இருந்தனர். 

முன்னதாக பரத் 3 ரன்னிலும், சிம்மன்ஸ் 2 ரன்னிலும், ஆல்ரவுண்டர் பிராவோ 9 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி தரப்பில், பிரவீன் குமார், இஷாந்த் சர்மா மற்றும் மிதுன் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago