முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மார்ச் 2-ல் விருப்ப விண்ணப்பம் பெறலாம்-விஜயகாந்த்

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.28 - தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோர் மார்ச் 2-ம் தேதி விருப்ப விண்ணப்பம் பெறலாம் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர், அதற்கான விருப்ப விண்ணப்பப் படிவங்களை  தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் மார்ச் 2ஆம் தேதி முதல் பெறலாம். அம்மனுக்களை மார்ச் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி மாலை 4 மணி வரை தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பொது தொகுதிக்கான விண்ணப்பங்களுக்கு ரூ. 10,000/​மும், தனி தொகுதிக்கான விண்ணப்பங்களுக்கு ரூ. 5000/​மும் கட்டணமாக செலுத்த வேண்டும். புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரை, பொது தொகுதிக்கு ரூ. 5000/​மும், தனி தொகுதிக்கு ரூ. 2500/​மும் கட்டணமாக செலுத்த வேண்டும். சட்டமன்ற தொகுதிகளுக்கு போட்டியிட விரும்புவோர் மேற்கூறிய வகையில் மனுக்களைப் தலைமை கழகத்தில் ஒப்படைக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்