எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூரு, பிப்.28 - இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பரபரப்பான லீக் போட்டி எத்தரப்புக்கும் வெற்றி தோல்வி இன்றி டையில் முடிவடைந்தது.
10-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பி பிரிவு லீக் போட்டி ஒன்றில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இரண்டு அணிகளுமே சம பலம் கொண்ட அணிகளாக திகழ்வதால் இந்த போட்டி ரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க வீரர்களாக சச்சின், வீரேந்திர சேவாக் இருவரும் களமிறங்கினர். சேவாக் துவக்கத்திலேயே ஆன்டர்சன் பந்தில் இரண்டு வாய்ப்புகளை கொடுத்தார். அதன் பிறகு அதிரடி ஆட்டத்தை துவக்கினார். ஆனால் அவரது வழக்கமான பலவீன ஷாட்டினாலேயே தேவையில்லாமல் ப்ரேஸ்னன் பந்தை தொட்டுவிட, கீப்பர் ப்ரையர் ஒரு கையால் அபாரமான கேட்சை பிடித்து சேவாக்கை வெளியேற்றினார். சேவாக் 35 ரன்களை எடுத்தார். அப்போது இந்திய அணி 46 ரன்களை எடுத்திருந்தது. இதன் பிறகு காம்பீர், டெண்டுல்கருடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் அதிரடியாக ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். அணியின் எண்ணிக்கை 180 க்கு உயர்ந்தபோது 51 ரன்கள் எடுத்திருந்த காம்பீர், ஸ்வானின் சுழல்பந்தில் அவுட்டானார். அடுத்ததாக யுவராஜ் களமிறங்கினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின் டெண்டுல்கர் தனது 47-வது ஒரு நாள் சதத்தை நிறைவு செய்தார். தொடர்ந்து 6 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ள சச்சினுக்கு உலகக் கோப்பையில் இது 5 வது சதமாகும். அணியின் எண்ணிக்கை 236 ஐ எட்டியபோது சச்சின், ஆன்டர்சனின் பந்தில் யார்டியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் எடுத்த ரன்கள் 120. 115 பந்துகளில் இந்த ரன்களை பெற்றார் சச்சின். இதில் 5 சிக்சர்களும், 10 பவுண்டரிகளையும் அடித்திருந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய யுவராஜ் மற்றும் தோனி, ரன் எண்ணிகையை 300 க்கு உயர்த்தினர். அணியின் எண்ணிக்கை 305 ஐ அடைந்தபோது அரை சதம் அடித்திருந்த யுவராஜ் சிங், யார்டியின் பந்துவீச்சில் இயான் பெல்லால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இதே ரன்னிலேயே கேப்டன் தோனியும் ப்ரேஸ்னன் பந்தில் அவுட்டானார். தோனி எடுத்த ரன்கள் 31. யூசுப் பதான் 8 பந்துகளில் 14 ரன்களையும், விராட் கோஹ்லி 5 பந்துகளில் 8 ரன்களையும், ஹர்பஜன் சிங் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டானார்கள். ப்ரேஸ்னன் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்த இறுதி கட்டத்தில் இந்தியாவின் ரன் குவிப்பு வேகம் குறைந்தது. இதனால் 49.5 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ப்ரேஸ்னன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆன்டர்சன், ஸ்வான், யார்டி ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
339 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கை விரட்ட களமிறங்கியது இங்கிலாந்து. துவக்க வீரர்களாக பீட்டர்சன் மற்றும் ஸ்ட்ராஸ் ஆகியோர் இறங்கினர். இவர்கள் அதிரடி துவக்கத்தை கொடுத்தனர். அணியின் எண்ணிக்கை 68 ஐ எட்டியபோது 31 ரன்கள் எடுத்திருந்த பீட்டர்சன், முனாப் பட்டேலின் பந்தில் அவராலேயே கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இவரை அடுத்து டிராட் கேப்டனுடன் ஜோடி சேர்ந்தார். டிராட் 16 ரன்கள் எடுத்த நிலையில் ப்யூஸ் சாவ்லாவின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு இயான் பெல்லும், ஸ்ட்ராசும் இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தனர். சிக்சர்களும், பவுண்டரிகளும் பறந்தன. இந்திய பவுலர்கள் செய்வதறியாது திகைத்தனர். எளிய வெற்றியை நோக்கி இங்கிலாந்து பயணம் செய்தது. இதில் பல கேட்ச் வாய்ப்புகளையும் இந்திய வீரர்கள் வீணாக்கினர். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் எண்ணிக்கை 281 ஆக இருந்தபோது, 43 வது ஓவரை வீசவந்த ஜாஹீர்கான், 69 ரன்கள் எடுத்திருந்த இயான் பெல் விக்கெட்டை வீழ்த்தினார். இந்த கேட்சை பிடித்தவர் விராட் கோஹ்லி. இதையடுத்து அடுத்த பந்திலேயே அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த ஸ்ட்ராசையும் 158 ரன்களில் வீழ்த்தினார் ஜாஹீர். இவருடைய இந்த ஓவர் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அடுத்ததாக களமிறங்கிய கோலிங்வுட்டையும், ஜாஹீர்கான் கிளீன் போல்டாக்க ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக திரும்பியது. இறுதியாக களமிறங்கிய இங்கிலாந்து பவுலர்களை அவுட்டாக்க மீண்டும் இந்திய பவுலர்கள் திணறினர். கடைசி ஓவரில் 14 ரன்களை எடுக்க வேண்டிய நிலையில் பந்துவீச வந்த முனாப் பட்டேல் அந்த ஓவரில் 13 ரன்களை விட்டுத்தர இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 338 ரன்களை எடுத்தது. இதனால் ஆட்டம் எத்தரப்புக்கும் வெற்றி தோல்வி இன்றி டையில் முடிந்தது. இந்திய தரப்பில் ஜாஹீர் கான் 3 விக்கெட்டுகளையும், முனாப் பட்டேல், ப்பூஸ் சாவ்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்பஜன்சிங் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 158 ரன்கள் எடுத்த ஸ்ட்ராஸ் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அணிக்கும், இங்கிலாந்து அணிக்கு தலா 1 புள்ளி கிடைத்தது. இரண்டு ஆட்டங்களின் முடிவில் இவ்விரு அணிகளும் 3 புள்ளிகளை பெற்றுள்ளன
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.