முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது :சண்டிமால் அபார சதம்

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2011      விளையாட்டு

லண்டன், ஜூலை. - 5  - இங்கிலாந்து அணிக்கு எதிராக லண்டனில் நடைபெற்ற 3 - வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத் தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடரில் 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை அணி தரப்பில் சண்டிமால் சதம் அடித் து அணிக்கு வெற்றி தேடித் தந்தார். ஜெயவர்த்தனே மற்றும் சங்கக்க ரா ஆகியோர் அவருக்கு பக்கபலமாக ஆடினர். முன்னதாக பெளலிங்கின் போது, மலிங்கா, லக்மல் மற்றும் மென்டி ஸ் ஆகியோர் நன்கு பந்து வீசி தலா 2 விக்கெட்டை எடுத்து இங்கி. அணியின் ரன் குவிப்பை கட்டுப் படுத்தினர். இங்கிலாந்து அணியின் கேப்டனான அலிஸ்டார் குக் இந்தப் போட்டி யில் சதம் அடித்தும் அது வீணாகிவிட்டது. இங்கிலாந்து அணியால் வெற்றி பெற முடியவில்லை. அந்த அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 3 -வது ஒரு நாள் போட்டி லண்டனில் உள்ள புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தி ல் நடைபெற்றது. இதில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணி தரப்பில், கேப்டன் குக் மற்றும் கீப்பர் கீஸ்வெட்ட ர் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். முதலில் களம் இறங்கிய அந்த அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 246 ரன்னை எடுத்தது.
துவக்க வீரராக இறங்கிய கேப்டன் குக் அதிகபட்சமாக, 143 பந்தில் 119 ரன்னை எடுத்தார். இதில் 13 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர், ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
அடுத்தபடியாக, மிடில் ஆர்டர் பேட்ஸமேனான பீட்டர்சன் 43 பந்தில் 41 ரன்னை எடுத்தார். இதில் 6 பவுண்டரி அடக்கம். தவிர, இயான் பெ ல் 46 பந்தில் 30 ரன்னையும், பிரஸ்னன் 29 பந்தில் 26 ரன்னையும் எடுத் தனர்.
இலங்கை அணி சார்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான மலிங் கா 54 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். லக்மல் 62 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, மென்டிஸ் 40 ரன்னைக் கொடு த்து 2 விக்கெட் எடுத்தார்.
இலங்கை அணி 247 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை இங்கிலாந்து அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 48.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 249 ரன்னை எடுத்தது.
இதனால் இலங்கை அணி இந்த 3 -வது ஒரு நாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டி கள் கொண்ட இந்தத் தொடரில் 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை பெ ற்று உள்ளது.
இலங்கை அணி தரப்பில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சண்டிமால் சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். அவர் 126 பந்தில் 105 ரன் னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 11 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம்.
துவக்க வீரராக இறங்கிய ஜெயவர்த்தனே 77 பந்தில் 79 ரன்னை எடுத் தார். சங்கக்கரா 47 பந்தில் 25 ரன்னை எடுத்தார்.கேப்டன் தில்ஷான் 3 ரன்னிலும், கண்டாம்பி 11 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
இங்கிலாந்து அணியின் முன்னணி சுழற் பந்து வீச்சாளரான ஸ்வான் 32 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, பிரஸ்னன் மற்றும் டெர்ன் பேச் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டி யின் ஆட்டநாயகனாக சண்டிமால் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்