முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை - ஜிம்பாப்வே அபார வெற்றி

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

நாக்பூர், பிப். 29 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாக்பூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 175 ரன் வித்தியாசத்தில் கனடா அணியை வீழ்த்தி முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் ஜிம்பாப்வே அணி தரப்பில், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான டைபு மற்றும் எர்வின் இருவரும் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர். 

பின்பு பெளலிங்கின் போது, பிரைஸ் மற்றும் கிரமர் இருவரும் அபார மாக பந்து வீசி முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அவர்களுக் கு பக்கபலமாக, லாம்ப் மற்றும் உத்செயா இருவரும் பந்து வீசி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் ஏ பிரிவு லீக் ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் ஜிம்பாப்வே மற்றும் கனடா அணிகள் மோதின. 

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்னை எடுத்தது. அந்த அணி சார் பில் 2 வீரர்கள் அரை சதமும், 2 வீரர்கள் கால் சதமும் எடுத்தனர். 

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான டைபு 2 ரன் வித்தியாசத்தில் சத வாய்ப்பை நழுவ விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான டைபு 99 பந்தில் 98 ரன்னை எடுத்தார். இதில் 9 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் பாலாஜி ராவ் வீசிய பந்தில் டேவிசனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

அடுத்தபடியாக, எர்வின் 85 பந்தில் 81 ரன்னை எடுத்தார். இதில் 6 பவு ண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். தவிர, வில்லியம்ஸ் 25 பந்தில் 30 ரன் னையும், கிரமர் 23 பந்தில் 26 ரன்னையும் எடுத்தனர். 

கனடா அணி தரப்பில், பாலாஜி ராவ் 57 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். குர்ரம் சோகான் மற்றும் பைத்வான் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். தவிர, ரிஜ்வான் சீமா 1 விக்கெட் எடுத் தார். 

கனடா அணி 299 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை ஜிம்பாப்வே அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 42.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 123 ரன்னில் ஆட்டம் இழந்தது. 

இதனால் ஜிம்பாப்வே அணி இந்த லீக் போட்டியில் 175 ரன் வித்தி யாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. ஜிம்பாப்வே அணிக்கு இது முதலா வது வெற்றியாகும். 

கனடா அணி சார்பில், ஒரு வீரர் கூட அரை சதத்தை தாண்டவில்லை. ஆனால் ஒரு வீரர் கால் சதம் அடித்தார். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னி ல் ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி தோல்வியைத் தழுவி யது.

கனடா அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஜுர்காரி  அதிகபட்ச மாக 48 பந்தில் 26 ரன்னை எடுத்தார். இதில், 2 பவுண்டரி அடக்கம். ஹன்ஸ்ரா 41 பந்தில் 20 ரன்னை எடுத்தார். தவிர, ரிஜ்வான் சீமா 14 ரன்னையும், பைத்வான் 13 ரன்னையும் எடுத்தனர். 

ஜிம்பாப்வே அணி தரப்பில், பிரைஸ் 16 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். கிரமர் 31 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, லேம்ப் மற்றும் உத்செயா ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக டைபு தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்