முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறையில் ராசா: ஊழலுக்கு எதிராக மத்தியஅரசு எடுக்கும்-ராகுல் காந்தி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

புது டெல்லி,ஜூலை.- 11 - ஊழலுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை காரணமாகவே முன்னாள் மத்திய அமைச்சர் ராசா சிறையில் இருக்கிறார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறினார். உத்தரபிரதேசத்தில் கடந்த நான்கு நாட்களாக பாதயாத்திரை மேற்கொண்ட அவர், பஜ்னா என்ற கிராமத்தில் விவசாயிகளின் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
ஊழல் விவகாரங்கள் தலையெடுக்கும் போதெல்லாம் மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாகவே முன்னாள் அமைச்சர்கள் கூட இப்போது சிறையில் இருக்கிறார்கள். ஊழல் புகாருக்கு ஆளான ராசாவும், மத்திய அரசின் நடவடிக்கை காரணமாகவே சிறையில் உள்ளார். இந்த சம்பவங்கள் மூலம் ஊழல் செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
லஞ்ச விவகாரங்களில் மத்திய அரசு துணிச்சலாக நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டில் ஊழலை ஒழிப்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகவும் அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு துணிச்சலாக மேற்கொண்டு வருவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்