எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச், 2 - தமிழகம் மற்றும் புதுவையில் ஏறக்குறைய 8 லட்சம் பேர் எழுதும் பிளஸ் 2 தேர்வுகள் இன்று(மார்ச் 2ம் தேதி) துவங்குகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ்2 தேர்வு மார்ச் 2ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 28ந் தேதியும் தொடங்கும் என்று அதிகாரப்nullர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி பிளஸ்2 தேர்வு இன்று தமிழ் முதல் தாளுடன் தொடங்குகிறது.
பிளஸ்2 தேர்வை 7 லட்சத்து 80 ஆயிரத்து 631 பேர் எழுதுகிறார்கள். அவர்களில் 5,477 பள்ளிகளை சேர்ந்த 7 லட்சத்து 23 ஆயிரம் மாணவமாணவிகள் எழுதுகிறார்கள். அவர்களில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 443 பேர் மாணவர்கள். 3 லட்சத்து 87 ஆயிரத்து 102 பேர் மாணவிகள். மாணவர்களை விட 50 ஆயிரத்து 659 மாணவிகள் அதிகமாக தேர்வு எழுதுகிறார்கள்.
சென்னை மாநகரில் 445 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 49 ஆயிரத்து 8 மாணவமாணவிகள் பிளஸ்2 தேர்வு எழுதுகிறார்கள்.
புதுவையில் 31 தேர்வு மையங்களில் 95 பள்ளிகளைச் சேர்ந்த 11 ஆயிரத்து 517 பேர் தேர்வு எழுதுகிறார்கள். அவர்களில் 5 ஆயிரத்து 212 பேர் மாணவிகள். 6 ஆயிரத்து 305 பேர் மாணவர்கள். மொத்தத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ்2 தேர்வுக்காக 1,890 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பள்ளிக்கூட மாணவர்களைத்தவிர தனித்தேர்வர்களாக 57 ஆயிரத்து 86 பேர் எழுதுகிறார்கள்.
தேர்வு தினமும் காலை 10 மணிக்கு துவங்கி பகல் 1.15 மணிக்கு முடிகிறது. இதில் கேள்விகளை படித்துப்பார்க்க வழக்கம்போல 15 நிமிடம் ஒதுக்கப்படுகிறது.
டிஸ்லெக்சியா, பார்வையற்றவர்கள், காதுகேளாதவர்கள், வாய் பேசாதவர்கள் மற்றும் இதர உடல் ஊனமுற்றோர்கள் சொல்வதை தேர்வில் எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் போன்ற சலுகைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் கட்டு உள்ள மையங்கள் பாதுகாப்பான இடங்களில் அமைந்துள்ளதா என்று முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, பின்னர் அங்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் அதிகாரிகள் ஆகியோரால் செய்யப்பட்டுள்ளன. அடிக்கடி ஆய்வு மையங்களை கண்காணிக்க அனைத்து ஆய்வு அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த குழுவில் போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட வருவாய் அதிகாரி, உதவி கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 4 ஆயிரம் கண்காணிப்பு உறுப்பினர்கள் தேர்வு மையங்களை பார்வையிடுவார்கள். பறக்கும் படையினர் தேர்வு மையங்களை பார்வையிடுவார்கள். மாணவர்கள் தேர்வில் காப்பி அடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். துண்டு சீட்டு வைத்திருத்தல், அடுத்த மாணவரை பார்த்து எழுத முயற்சி செய்தல், தேர்வு அதிகாரிகளிடம் முறைகேடாக நடத்தல், ஆம் மாறாட்டம் செய்து தேர்வு எழுதுதல் ஆகியவை குற்றமாகும். இதில் அதிகபட்ச தண்டனையாக சிறைத்தண்டணை கிடைக்கும். அவர்கள் தேர்வு எழுத முடியாது. கோர்ட்டு வழக்கு முடிந்தபின்னர் தான் அதுபற்றி முடிவு செய்யப்படும். தேர்வை நல்ல முறையில் நடத்திட மாணவர்களும் ஒத்துழைக்கவேண்டும்.
தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த வருடம் 5 லட்சத்து 15 ஆயிரத்து 281 பேர் பயன் அடைந்துள்ளனர்.
பிளஸ்2 தேர்வுக்கான கால அட்டவணை விவரம் வருமாறு:
மார்ச் 2ந் தேதி தமிழ் முதல் தாள்
3ந் தேதி தமிழ் இரண்டாம் தாள்
7ந் தேதி ஆங்கிலம் முதல் தாள்
8ந் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்
11ந் தேதி இயற்பியல், பொருளாதாரம், உளவியல்
14ந் தேதி வேதியியல், அக்கவுண்டன்சி, சுருக்கெழுத்து
17ந் தேதி கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நிட்ரிசியன் அன்ட் டயட்டிக்ஸ்
18ந் தேதி வணிகவியல், மனை அறிவியல், புவியியல்
21ந் தேதி உயிரியல், வரலாறு, தாவரவியல், அடிப்படை அறிவியல், வர்த்தக கணிதம்
23ந் தேதி தட்டச்சு, கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழி பாடம்
25ந் தேதி அனைத்து தொழில்பாட தேர்வுகளும், அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 28ந் தேதி துவங்கி ஏப்ரல் 11ந்தேதி முடிகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 7 லட்சத்து 54 ஆயிரத்து 679 பேர் எழுத உள்ளனர். மேலும் தனித்தேர்வர்களும் ஒரு லட்சம் பேர் எழுதுகிறார்கள். மொத்தத்தில் 8 லட்சத்து 55 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்.
மெட்ரிகுலேசன் தேர்வு, ஆங்கிலோ இந்தியன் தேர்வு, ஓ.எஸ்.எல்.சி. ஆகிய தேர்வுகளும் மார்ச் 22ந்தேதி தொடங்கி ஏப்ரல் 11ந் தேதி முடிகிறது. மெட்ரிகுலேசன் தேர்வை ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 252 பேர் எழுதுகிறார்கள்.
இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டத்திலான 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நேற்று நாடு முழுவதிலும் துவங்கியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.