எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச். 2 - ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவும் அவல நிலைக்குக் காரணமான, வாழப்பாடி ஒன்றியத்தில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்தும், 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் கருணாநிதி குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (2.3.2011 புதன் கிழமை) நடைபெறும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஐந்து ஆண்டு காலமாக தமிழகத்தில் மக்களாட்சி நடைபெறவில்லை. மாறாக, மக்களை வாட்டி வதைக்கின்ற, மக்களை சுரண்டுகின்ற ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
சேலம் புறநகர் கிழக்கு மாவட்டம், ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாழப்பாடி ஒன்றியத்தில் 30 ஏக்கர் பரப்பளவில் சிமெண்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்தத் தொழிற்சாலையின் உபயோகத்திற்காக 1500 அடிக்கு மேல் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து nullநீர் எடுக்கப்படுகின்றன என்றும், இதன் விளைவாக இந்தத் தொழிற்சாலையை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாலைவனம் போல் காட்சி அளிப்பதாகவும், 1ஙூ லட்சத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் குடிnullநீரின்றி திண்டாடி வருவதாகவும், இந்த சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறுகின்ற புகை காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பல்வேறு விதமான நோய்களுக்கு அப்பகுதி மக்கள் ஆளாகி இருப்பதாகவும், சிமெண்ட ஆலைக்கு அருகில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் கல்வி கற்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தொழிற்சாலைகளுக்கு லாரிகள் அடிக்கடி வந்து செல்வதன் காரணமாக சாலைகள் பழுதடைந்து அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், குறைவழுத்த மின்சாரம் காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதே போன்று, அயோத்தியாபட்டினம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும், ஏற்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் பழுதடைந்த சாலைகள், மின் வெட்டுப் பிரச்சினை, குடிநீnullர்ப் பிரச்சினை ஆகியவை தலைவிரித்து ஆடுவதாகவும் புகார்கள் வருகின்றன. மலைவாழ் மக்களின் வாழ்க்கை நிலைமை இப்படி இருக்க, கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் ஊர் சொத்துக்களை கொள்ளையடித்து சுகபோக வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர். மணல் கொள்ளை, அரிசி கடத்தல், நில மோசடி போன்ற சட்டவிரோதச் செயல்கள் மூலம் வருகின்ற பணம் போதாது என்று, உலகமே வியக்கும் வண்ணம் 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் மூலம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கருணாநிதியும் அவரது குடும்பத்தினரும் ஊழல் புரிந்து இருக்கின்றனர். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டைப் பெற்ற டைனமிக்ஸ் பால்வா நிறுவனத்திடமிருந்து கலைஞர் டி.வி.க்கு 214 கோடி ரூபாய் சென்றிருப்பதும், சிவசங்கரனின் எஸ்.டெல் நிறுவனம் கலைஞர் டிவியை துவக்குவதற்கு கணிசமான தொகையை கொடுத்திருப்பதும், ஏர்செல் நிறுவனம் கருணாநிதியின் குடும்ப நிறுவனமான சன் டைரக்ட் டிவியில் 675 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்து இருப்பதும் தற்போது தெரிய வந்துள்ளன.
இதிலிருந்து இந்த இமாலய ஊழலின் பின்னணியில் இருப்பவர்கள் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் என்பது தெளிவாகிறது. ஆனால், இந்த ஊழலின் பின்னணியில் உள்ள இவர்கள் யாரும் இதுவரை விசாரிக்கப்படவோ, கைது செய்யப்படவோ இல்லை. எனவே, 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலின் பின்னணியில் உள்ள கருணாநிதி குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சேலம் மாவட்டம், ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவும் அவல நிலைமைக்குக் காரணமான, வாழப்பாடி ஒன்றியத்தில் சிமெண்ட் தொழிற்சாலையால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்தும், மக்களின் அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், சிமெண்ட் தொழிற்சாலையால் ஏற்படும் பாதிப்புகளை போக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று (2.3.2011 புதன் கிழமை) காலை 10 மணியளவில், ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், ஜெயலலிதா பேரவைச் செயலாளர் நயினார் நாகேந்திரன் தலைமையிலும், சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.கே. செல்வம் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும்.
தோழமைக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் நலனை முன் வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: தங்கம் ஒரு பவுன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்தது: சாமானிய மக்கள் கடும் அதிர்ச்சி
28 Mar 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையானது.
-
3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்வு
28 Mar 2024சென்னை, தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 100 நாட்கள் வேலை திட்ட ஊதியம் ரூ.319 ஆக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நூறு நாள் வேலை திட்டத்த்தில் ஒரு நாள் ஊதியம் ரூ. 294 இருந்து ரூ. 319 ஆக அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம்: தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024