முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்தமாதம் 18-​ந் தேதி நிரோஷா - ராம்கி வீடுகள் ஏலம்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூலை.17 -​ நடிகர் ராம்கி, நடிகை நிரோஷாவின் வீடுகள் வங்கி மூலம் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்த விபரம் வருமாறு:-

ராம்கியும், நிரோஷாவும் செந்தூரப்வே படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள ஜெமினி பார்சன் அபார்ட் மெண்ட் குடியிருப்பில் கணவன்​ மனைவியாக வசித்து வருகிறார்கள். 

இந்த அபார்ட் மெண்டில் இவர்களுக்கு இரண்டு வீடுகள் உள்ளன.   இந்த வீடுகளை அடமானம் வைத்து இந்தியன் ஓவர்சீஸ் பாங்கியிலும், கார்ப்பரேஷன் வங்கியிலும் பல லட்சம் ரூபாய் கடனாக பெற்றனர். ஆனால் அதற்கு வட்டி செலுத்தவில்லை. இதனால் வங்கிக்கு கொடுக்க வேண்டிய கடன் தொகை கோடியை தாண்டியது. இதையடுத்து இரு பாங்கிகளும் வீடுகளை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளன.  நிரோஷா​ராம்கி வீடுகள் அடுத்த மாதம் 18​ந்தேதி பகல் 1 மணிக்கு பகிரங்க ஏலத்தில் விடப்படும் என்று வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. குறைந்தபட்ச ஏல கேட்பு தொகை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்