எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச். 2- தருமபுரி, சேலம் கோட்டப் போக்குவரத்து தொழிலாளர்கள் 1300 பேருக்கு பணி நிரந்தர ஆணை வழங்க வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தருமபுரிசேலம் கோட்டத்திற்கு 2007ஆம் ஆண்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து தமிடிநநாடு அரசு போக்குவரத்துத் துறையில் பணியாற்ற ஓட்டுநர், நடத்துநர் பணிக்கான நேர்காணலுக்குத் தகுந்த ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் பணிக்கப்பட்டனர். வண்ணக் கனவுகளுடன் தங்களின் படிப்பு, திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையோடு
நேர்காணலுக்குச் சென்றவர்களுக்குப் பேரிடியாக ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்குச் சில இலட்சங்கள் விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் பணத்தைச் சம்பந்தப்பட்ட ஆளுங்கட்சிப் புள்ளியிடம் கட்டி இரசீது காண்பித்தால் வேலை உறுதி என்றும் அவர்களிடம் சொல்லப்பட்டது.
வறட்சியினால் பின்தங்கிய மாவட்டத்தில் வறுமைக்கோட்டில் வாழ்பவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கி நின்றனர். இருப்பினும் எதிர்காலம் கருதி தங்களின் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தர்களாக நவீன வேதாளமான ஆளும் தரப்பை நிறைவு செய்ய தத்தம் குடும்பத்தினரிடம் பணம் கேட்டு சண்டையிட்டும், பலர் வட்டிக்குப் பணம் வாங்கியும், தங்களுக்குச் சொந்தமான வீட்டையும், நிலத்தையும் விற்றும், சிலர் தங்கள் மனைவியின் நகை, தாலியை விற்றும் ஒருவழியாக அதிகார வர்க்கத்தினரிடம் பணத்தைக் கட்டினர்.
2007ஆம் ஆண்டு 1300 பேர் வேலைக்குச் சேர்வதற்கு அரசாணையும் 240 பணி நாட்களுக்குப் பின்னர் நிரந்தரம் செய்யப்படும் என்ற உத்தரவாதத்துடன் பணியில் சேர்ந்து ஆண்டுகள் நான்கு உருண்டோடின. பல 240 நாட்கள் பணி செய்த பின்பும் மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் இறுதி நாட்கள் எண்ணப்படுகின்ற இந்த நாள்வரை அவர்கள் பணி
நிரந்தரம் செய்யப்படாமல் ஏமாற்றப்படுகின்றனர். 01 மார்ச் 2011
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அந்தத் தொழிலாளர்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பயன் இல்லை. மாறாக, முன்னின்று கேட்பவர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையாகப் பணி nullக்கம் செய்வதும், இடமாற்றம் செய்வதுமாக அலைகழிக்கப்பட்டனர். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அத்தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக வாழ்வா சாவா என்ற நிலையில் 25.02.2011 வெள்ளிக்கிழமை
தொடங்கி கடந்த ஐந்து நாட்களாகத் தம் குடும்பத்தினருடன் தொடர் உண்ணாவிரத அறவழிப் போராட்டம் இருந்து வருகின்றனர். இதற்கு அனுமதி இல்லை என்று காவல்துறை மிரட்டுகிறது. ஒலிபெருக்கி அனுமதி வழங்காமல் அவமதிக்கப்படுகின்றனர். ஜனநாயக நாட்டில் தான் உள்ளோமா அல்லது சர்வாதிகார நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோமா
என்று எண்ணும் நிலையில் தருமபுரி அரசு போக்குவரத்துத் தலைமை அலுவலகத்தின் எதிரே சாலை ஓரத்தில் சாமியானா பந்தலிட்டு நியாயம் வேண்டி தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதில் மொரப்nullர் இரமேஷ், நண்டுகாரம்பட்டி சண்முகம், ஊத்தங்கரை வடிவேல் ஆகியோர் நேற்று முன்தினம் மயங்கி விழுந்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுவரை அரசுத் தரப்பில் போராடி வரும் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த யாரும் முன்வரவில்லை. அரசின் இந்த அலட்சியப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். வேலை வழங்கியதற்கு கையூட்டு இலஞ்சம் வாங்கியும் பணி நிரந்தரம் வழங்காதது மன்னிக்க முடியாத மாபெரும் தவறு. இதுதான் அரசு போக்குவரத்துத் துறை இயங்கும் இலட்சணம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போன்று இந்த அரசின் சார்பில் இதுவரை கையூட்டு லஞ்சம் பெற்று பணிகள் வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணக்கு இருக்கிறது. விரைவில் ஆட்சி மாறும்; அப்போது காட்சிகளும் மாறும். இதுபோன்ற லஞ்சம் வாங்கி மோசடி செய்தவர்கள் எவ்வளவு உச்சத்தில் இருந்தாலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். எனவே, தாமதம் இன்றி தருமபுரிசேலம் கோட்டப் போக்குவரத்துப் பணியாளர்கள் 1300 பேருக்கும் பணி நிரந்தரம் வழங்கி ஆணை பிறப்பித்திட வேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.