முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுமுகங்கள் நடிக்கும் `வாக்கப்பட்ட சீமை'

புதன்கிழமை, 2 மார்ச் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, மார்ச்.2 - பெரியநாயகி அம்மன் கிரியேஷன்ஸ் வழங்க கே.கே.கண்ணதாசனின் இணை தயாரிப்பில் உருவாகும் படம் `வாக்கப்பட்ட சீமை'. இந்தப் படத்தில் அரவிந்த், பந்தனா, வானதி ஆகியோர் கதாநாயகன், கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் கஞ்சா கருப்பு, வெங்கட்ராவ், போண்டா மணி, சிவநாராயணமூர்த்தி, கிளி ராமச்சந்திரன், பெஞ்சமின், மாஸ்டர் சங்கர் இவர்களுடன் மாமதுரை தயாரிப்பாளர் கோட்டை குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் இந்தப் படத்தின் இயக்குனர் பந்தா பாண்டியன், தயாரிப்பாளர் கே.கே.கண்ணதாசன் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். 

ஒளிப்பதிவு- பகவதி, கலை- ஏ.சி.சேகர், நடனம்- கென்னடி, உமா, சிவா, எடிட்டிங்- வேலாயுதம், ஸ்டன்ட்- கில்லி சேகர், தயாரிப்பு நிர்வாகம்- ஸ்ரீதர், தயாரிப்பு மேற்பார்வை- ஆர்.எம்.சேகர், முத்து, தயாரிப்பு- திருப்பூர் கே.எல்.ஜெயபிரகாஷ், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்து டைரக்ட் செய்கிறார் பந்தா பாண்டியன். 

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற உண்மை சம்பவம் தான் கதையாகி `வாக்கப்பட்ட சீமை' பெயரில் உருவாகிறது. 400 வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவங்கள் எந்தெந்த ஊர்களில் நடைபெற்றனவோ அதே ஊர்களில் சம்பவம் நடைபெற்ற அதே இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. சினிமா ரசிகர்களுக்கு வாக்கப்பட்ட சீமை புது அனுபவமாக இருக்கும் என்றார் தயாரிப்பாளர் திருப்பூர் கே.எல்.ஜெயபிரகாஷ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்