முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திமுக பிரமுகரின் தம்பியை மீட்க சோடா பாட்டில் வீச்சு

புதன்கிழமை, 20 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஜூலை.20 - மதுரையில் நில மோசடியில் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகரின் தம்பியை  மீட்டுக்கொண்டு செல்வதற்காக போலீசார் மீது சோடாபாட்டில் வீசிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை ஜெய்கிந்துபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் கடந்த 1982 ஆண்டு ஜீவா நகரில் 20 சென்ட் நிலம் வாங்கினார். பின்னர் வேலை விஷயமாக பல ஊர்களுக்கு மாறுதலாகி சென்ற அவர் ஓய்வு பெற்ற பின் 2008 ல் மதுரை வந்தார். அப்போது அந்த இடத்தில் பழனி என்பவர் பீரோ கம்பெனி நடத்தி வந்தார். இது குறித்து கேட்ட போது திமுக பகுதி செயலாளர் ஆர்.எஸ்.ராமலிங்கத்தின் சகோதரர் ஆர்.எஸ்.கணேசனக்கு சொந்தமான இடம் என பழனி தெரிவித்தார்.  விசாரணையில் ஆர்.எஸ். கணேசன் போலி ஆவணம் தயாரித்து 70 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை நில மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கராஜ் போலீசில் புகார் செய்தார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் நிலமோசடி தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவிடம் தங்கராஜ் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் இரவு ஆர்.எஸ் கணேசன்(49) பழனி (46) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

   விசாரணைக்கு பின்பு இருவரையும் மதுரை ஜேஎம் 6 கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு மதுரை மத்திய சிறைக்கு காரில் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் கொண்டு சென்றார். இவர்களை ஏற்றிய போலீஸ் வாகனம் யானைக்கல் அருகே சென்ற போது போலீஸ் வாகனத்தை முந்தி வந்து 3 கார் மறித்தது. கார்களில் இருந்து 6 பேர் இறங்கி போலீசார் மீது சோடாபாட்டில்களை வீசினர். பின்னர் கைதிகள் கணேசன், பழனி ஆகியோரை மீட்டு செல்ல முயன்றனர். அவர்களுடன் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் போராடினார். இது குறித்து அதிரடி படை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கைதிகளை மீட்க முயன்ற 6 பேரையும் வளைத்து பிடித்தனர்.  இது தொடர்பாக விளக்குதூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரை ஜீவாநகர் 1 வது தெருவை சேர்ந்த சிராஜூதின்(33) கைதி கணேசனின் உறவினர்கள் பாண்டி(34) மோகன்ராஜ்(39) திருப்பதி(42) கணேஷ் பிரசாத்(36) வெங்கடேஷ் (30) ஆகிய 6 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். திமுக பகுதி செயலாளரின் தம்பியை மீட்க ஒரு கும்பல் போலீசார் மீது சோடா பாட்டில் வீசிய சம்பவம் மதுரையில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago