முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ உரிமையை தர கே.எஸ்.ரவிக்குமார் வலியுறுத்தல்

புதன்கிழமை, 20 ஜூலை 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூலை 20 - திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க வீடியோ உரிமையை தர வேண்டும் என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கூறினார். ஜீவா-​ஸ்ரேயா ஜோடியாக நடிக்கும் படம் ரெளத்திரம். ஆர்.பி. சவுத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது.கோகுல் இயக்குகிறார். இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது.

விழாவில் ஜீவா பேசியதாவது:​

ரெளத்திரம் கதை அப்பாவுக்கும் எனக்கும் பிடித்தது. இயக்குனர் கோகுல் திடமான சிந்தனை உள்ளவர். எந்த குழப்பமும் இன்றி நினைத்த மாதிரி படத்தை எடுத்துள்ளார். பாடல்கள் நன்றாக வந்துள்ளன. என் திரையுலக வாழ்க்கையில் இது வித்தியாசமான படமாக இருக்கும். திரைப்படஙக்ளில் அறிமுக சீன்கள் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று கதாநாயகர்கள் விரும்புவது உண்டு. ஆனால் இந்த படத்தில் எனது அறிமுக காட்சி ரொம்ப சாதாரணமாக இருக்கும்.விறு விறுப்பான கமர்சியல் படமாக இருக்கும். ஸ்ரேயா சிறந்த டான்சர். இந்த படத்தில் அவருக்கு மென்மையான வேடம். எனக்கும் அவருக்கும் செமஸ்ட்ரி, நன்றாக இருந்தது. இயக்குநரும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களும் சமமாக உழைத்து படத்தை எடுத்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். 

விழாவில் நடிகர் ஆர்யா பேசுகையில், ஸ்ரேயா நல்ல நடிகை. சிறப்பாக நடிப்பார். எல்லோரும் ஜீவா பற்றி பேசுவார்கள். நான் ஸ்ரேயா பற்றி பேசுகிறேன் என்றார். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில்,  திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க முடியாது. அதற்கு பதிலாக படம் எடுக்கும்போது அதன் உரிமையை வீடியோ சி.டி. உரிமையாளர்களுக்கு கொடுத்து விட்டால்  தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்கும். அதற்கு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக ஆர்.பி.சவுத்ரி வர வேண்டும் என்றார்.  

 நடிகர்கள் ஆர்யா, ஜெயம்ரவி, நடிகை ஸ்ரேயா, இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், கே.எஸ்.ரவிக்குமார், ராசுமதுரவன், ராஜேஷ், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, தாணு, மெளனம் ரவி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்