முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றாலம் சென்ற 3 பேர் துவரங்குறிச்சி அருகே பலி

புதன்கிழமை, 20 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

மணப்பாறை.ஜூலை.20 - விபச்சார அழகியுடன் குற்றாலத்திற்கு உல்லாசம் அனுபவிக்க சென்ற வியாபாரி உட்பட மூன்று பேர் கார் கவிழ்ந்து பலியாகினர். விழுப்புரம் சிங்கார தோப்பு பகுதியை சேர்ந்தவர் அப்பாஸ் காதர் (30) இரும்பு வியாபாரி. இவரது நண்பர்கள் யூனஸ்காதர்(29), வக்கீல் கிஷோர்குமார்(30), டிரைவர் அரவிந்த்(28) ஆகியோருடன் சென்னையை சேர்ந்த விபச்சார அழகி மணிமேகலை (24) யுடன் குற்றாலத்திற்கு உல்லாசம் அனுபவிக்க காரில் புறப்பட்டனர். நேற்று முன்தினம் டிரைவர் அரவிந்த் காரை ஓட்டிச் சென்றார். அதிகாலை 3.30 மணிக்கு துவரங்குறிச்சி அருகே உள்ள முக்கன்பாலம்  அருகே வந்துகொண்டிருந்தபோது திடீரென கார் நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதி சுமார் 20 அடி பள்ளத்தில் கார் உருண்டது. இதில் சம்பவ இடத்திலேயே இரும்பு வியாபாரி அப்பாஸ் காதர், யூனஸ்காதர், விபச்சார அழகி மணிமேகலை ஆகிய மூன்று பேரும் உடல் நசுங்கி அதே இடத்தில் பலியானார்கள். காரில் இடுபாடுகளில் சிக்கி வக்கீல் கிஷோர் குமார், டிரைவர் அரவிந்த் ஆகியோர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இது பற்றி தகவல் கிடைத்தவுடன் மணப்பாறை ஜி.என்.ஆர் மீட்பு குழு நிர்வாக இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் உதவியாளர்கள் கிஷோர்குமார், அரவிந்தை மீட்டு உடனடியாக துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலிஸ் இன்ஸ்பெக்டர் சுருளியாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர், தெய்வீக நாதன் மற்றும் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்