எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் ஜூலை.21- சேலம் அங்கம்மாள் காலனி நில விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்பட 10 பேரை பிடிக்க 12 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.
கடந்த தி.மு.க.ஆட்சிகாலத்தில் சேலம் புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள அங்கம்மாள் காலனியில் வசித்து வந்த 31 குடும்பத்தினரை ஒரு நாள் திடீரென நள்ளிரவில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆட்கள் அவர்களை அடித்து விரட்டி சொற்ப தொகை கொடுத்து மிரட்டி பத்திரத்தில் கையெழுத்து வாங்கினர். பின்னர் அந்த நிலம் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர் கவுசிக nullபதி பெயரில் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர் .ஆனால் போலீசார் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இது தொடர்பாக சென்னை ஐ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஜட்ஜ் அமைச்சர் வீராபண்டி ஆறுமுகத்தின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டும் போலீசார் அதை கண்டுகொள்ளவில்லை. இந்த நில விவகாரத்தில் அப்போதைய அரசு அதிகாரிகள் அனைவரும் அமைச்சருக்கு ஆதரவாகவே இருந்தனர்.
கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க.ஆட்சி அமைத்தால் நிலத்தை பறி கொடுத்தவர்களுக்கு அபகரித்தவர்களிடம் இருந்து வாங்கி கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதே போல் சேலத்தில் பிரச்சாரத்திற்கு வந்த போதும் அங்கம்மாள் காலனி நிலம் மீட்கப்பட்டு உரியவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் பேசினார்.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் நில மோசடிகளை விசாரிக்கவே தனிப்பிரிவை ஏற்படுத்தினார். மாநிலம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான புகார்கள் தனிப்பிரிவு போலீசாரிடம் வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த தி.மு.க.ஆட்சியில் பாதிக்கப்பட்ட அங்கம்மாள் காலனி பொதுமக்கள் கலெக்டரிடம் தங்கள் நிலத்தை மீட்டு தங்களுக்கு வழங்க வேண்டும் என புகார் மனு கொடுத்தனர். அந்த புகார் மனுவை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் மகரnullஷணம் மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கத்திற்கு பரிந்துரை செய்தார். அவர் இந்த வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அவர்கள் இந்த வழக்கை விசாரித்து அங்கம்மாள் காலனி நில அபகரிப்பில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்தனர். அதைத்தொடர்ந்து இந்திய தண்டனைச் சட்டம் 147( அத்துமீறல்), 148 பயங்க ஆயுதங்களால் கலகம் விளைவித்தல்) 447(அத்துமீறி உள்ளே நுழைதல்), 109 (குற்றம் செய்ய தூண்டுதல்), 467(நம்பிக்கை மோசடி), 506(2)(கொலை மிரட்டல்) ஆகிய ஏழு பிரிவுகளில் வீரபாண்டி ஆறுமுகம் முதல் குற்றவாளியாகவும் அதில் தொடர்புடைய அவரது தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ்குமார், உறவினர் கவுசிகnullபதி, காங்கிரஸ் பிரமுகர்கள் எம்.ஏ.டி.கிருஷ்ணசாமி, உலக நம்பி, தி.மு.க.கவுன்சிலர் ஜிம் ராமு, ஆட்டோ முருகன், பீடாகடை கனகராஜ், சித்தானந்தம் கறிக்கடை பெருமாள், அப்போதைய சேலம் ஆர்.டி.ஓ.பாலகுருசாமி, அப்போதைய பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் ஆகிய 13 பேர் மீது நேற்று முன் தினம் இரவு வழக்கு பதிவு செய்தனர்.
அதைத் தொடர்ந்து காங்கிரஸ் பிரமுகர் எம்.ஏ.டி.கிருஷ்ணசாமி, ஆட்டோ முருகன், பீடா கடை கனகராஜ் ஆகியோரை நேற்று முன் தினம் இரவே போலீசார் கைது செய்தனர்.
இதே போல் சேலம் 5 ரோட்டில் உள்ள சென்னீஸ் கேட்வே ஹோட்டல் எதிரே பிரிமியர் ரோலர் மில்ஸ் சொந்தமான நிலம் இருந்தது. இதன் பங்குதாரர்களாக கே.வெங்கடாஜலம், வி.ரவிச்சந்திரன், வி.வேணுகோபால், வி.பாலாஜி ஆகியோர் இருந்தனர். இந்த நிலத்தின் பேரில் வெங்கடாஜலம் என்பவர் ரூ.3 கோடிக்கு பவர் எழுதிக் கொடுத்து ஆடிட்டர் துரைசாமி என்பவரிடம் ரூ.3 கோடி கடன் வாங்கியிருந்தார். அதற்கான வட்டி தொகையையும் கொடுத்துவந்துள்ளார். பின்னர் நிலத்தை மீட்க செல்கையில் அவர் நிலம் தரமுடியாது பவர் எழுதிக்கொடுத்ததால் நிலம் எனக்கு சொந்தம் என கூறி மிரட்டியுள்ளார். இது தொடர்பாக அப்போதைய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகமும் இதில் தலையிட்டு வெங்கடாஜலத்தை மிரட்டியுள்ளதாக தெரிகிறது. பின்னர் அந்த நிலத்தை சேலத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.ஆர்.எஸ்.சீனிவாசன், அவரது மகன் ராமநாதன், மனைவி ராஜேஸ்வரி உள்ளிட்டோருக்கு ரூ.30 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர். அதில் சொற்ப தொகையான 7 கோடியை வெங்கடாஜலத்திற்கு கொடுத்துவிட்டு மற்ற பணத்தை வீரபாண்டி ஆறுமுகம் உள்பட பலர் பங்கிட்டுக்கொண்டுள்ளதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த வெங்கடாஜலம் இறந்தே போனார்.
இந்த நிலையில் வெங்கடாஜலத்தின் மகன் ரவிச்சந்திரன் என்பரும் இந்த நிலம் அபகரிப்பு குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கத்திடம் புகார் கொடுத்தார். அவர் இது குறித்து விசாரிக்க மத்திய குற்ற பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி இந்த நில அபகரிப்பில் தொடர்புடைய முதல் குற்றவாளியாக வீரபாண்டி ஆறுமுகம், ஆடிட்டர் துரைசாமி, அவரது மகன் அசோக் துரைசாமி,சி.துரைசாமி, பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் லட்சுமணன், ஏ.ஆர்.ஆர்.எஸ்.சீனிவாசன், அழகாபுரம் தி.மு.க.செயலாளர் அழகாபுரம் முரளி, ஏ.ஆர்.ஆர்.எஸ்.சீனிவாசன், மகன் ராமநாதன், சீனிவாசன் மனைவி ராஜேஸ்வரி உள்பட 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.85 கோடியாகும்.
மேற்கண்ட 2 வழக்குகளிலும் வீரபாண்டி ஆறுமுகம் முதல்குற்றவாளி என்பதால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அங்கம்மாள் காலனி நில அபகரிப்பால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று கூடினர் .அவர்களிடம் போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் விசாரணை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு மற்றும் பிரிமியல் மில்ஸ் நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் இந்த இரண்டு வழக்கிலும் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்களை கண்டு பிடித்து கைது செய்ய 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிலையில் இந்த வழக்குகளில் போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தரப்பில் சென்னை ஐ கோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.ஆனால் போலீசாரோ முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதற்குள் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட தி.மு.க.வினர், அதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரி,மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் சேலம் மாவட்ட பொதுமக்களிடையே மகிழ்ச்சியையும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் தி.மு.க.வினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.