எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் ஜூலை.- 26 - சேலத்தில் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு மற்றும் பிரிமியர் மில்ஸ் விற்பனை தொடர்பான வழக்கில் தி.மு.க.முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நேற்று காலை 10 மணியளவில் கோர்ட் உத்தரவின் பேடி சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து போலீசார் அவரிடத்தில் விசாரணையை தொடங்கி உள்ளனர். சேலத்தில் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு வழக்கு மற்றும் பிரிமியர் மில்ஸ் நிலம் விற்பனை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் பாதிகப்பட்டவர்களின் புகாரின் அடிப்படையில் முன்னாள் தி.மு.க.அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முதல் குற்றவாளி என சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு வழக்கிலும் அவரை போலீசார் தேடி வந்தனர். போலீசார் இந்த வழக்குகளில் தன்னை கைது செய்யாமல் இருக்க வீரபாண்டி ஆறுமுகம் சார்பில் சென்னை ஐ கோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஜாமீன் மனு மீதான விசாரணையில் ஜட்ஜ் ராஜசூர்யா வீரபாண்டி ஆறுமுகம் வரும 25 ந் தேதி காலை 10க்குள் சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் சரணடைய வேண்டும்.போலீசார் அவரை தங்கள் காவலில் எடுத்து 2 வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தி முடித்துவிட்டு புதன் கிழமை 27 ந் தேதி மாலை 5 வது மாஜிஸ்திரேட் கோர்ட்டி ஆஜர்படுத்திட வேண்டும். அப்போது ரூ.25 ஆயிரத்திற்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் அளித்து வீரபாண்டி ஆறுமுகம் வெளியே வரலாம். பின்னர் தினமும் சம்மந்தப்பட்ட போலீசில் மறு உத்தரவு வரும் வரை தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். என உத்தரவிட்டார்.
கோர்ட் உத்தரவின் படி வீரபாண்டி ஆறுமுகம் நேற்று போலீசில் சரணடைவார் என்பதை போலீசார் எதிர்பார்த்தனர். இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் ஏதும் வந்துவிடக்கூடாது என்பதற்காக காலை 9 மணி முதலே தங்கம்பட்டு மாளிகையில் இருந்தும், டி.எம்.செட்டிலிருந்தும் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. இருசக்கர வாகனங்களை தவிர வேறு எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. டவுன் காவல் நிலையம் உள்ள அந்த பகுதியில் சுமார் 100 மீட்டருக்கு எல்லா கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. சாலையின் இருபுறங்களிலும் டிவைடர் பலகைகள் வைத்து போக்குவரத்தை மாற்றிவிட்டு போலீசார் அந்த பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர். பாதுகாப்பு பணிகளுக்காக போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் தலைமையில் துணை கமிஷனர்கள் பாஸ்கரன், ரவீந்திரன் மேற்பார்வையில் மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் கண்காணிப்பில் சுமார் 200 க்கும் மேற்பட்ட போலீசாரும், 10 க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய கருப்பு உடையணிந்த அதிவிரைவு பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.போலீஸ் பாதுகாப்பு வாகனமான தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வேனும் நிறுத்தப்பட்டிருந்தது.
காலை 10 மணியளவில் வீரபாண்டி ஆறுமுகம் தனது காரில் தனது ஆதரவாளர்களுடன் டவுன் காவல் நிலையத்திற்கு வந்தார். அப்போது கூடியிருந்த தொண்டர்கள் அவருக்கு ஆதரவாக வாழ்க கோஷமும், போலீசாருக்கு எதிராக கோஷமும் எழுப்பினர். அப்போது போலீசாரின் பாதுகாப்பு டிவைடரை தள்ளிக்கு கொண்டு தொண்டர்கள் உள்ளே நுழைய முயன்றனர்.போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தனர். இதனால் அங்கு போலீசாருக்கும்,தொண்டர்களுக்கு இடைய தள்ளு முள்ளு ஏற்பட்டு சிறிது பதட்டம் நிலவியது. பாதுகாப்பு காரணங்களுக்கா வீரபாண்டி ஆறுமுகத்தின் கார் மட்டும் டவுன் காவல் நிலைய வாசல் வரை போலீசார் அனுமதித்தனர்.
பின்னர் காவல் நிலையத்தின் உள்ள வீரபாண்டி ஆறுமுகம் எம்.பி.க்கள் கே.பி.ராமலிங்கம்,ஆதிசங்கர், முன்னாள் எம்.எல்.ஏ.வும் அவரது மகனுமான வீரபாண்டி ராஜா, அவரது வக்கீல்கள் மூர்த்தி,சிவபாஸ்கரன், உதவியாளர் சேகர் ஆகியோர் மட்டுமே உள்ள அனுமதிக்கப்பட்டனர். சேலம் மாநகர் மத்திய குற்றபிரிவு உதவி ஆணையாளர் பிச்சை முன்பு வீரபாண்டி ஆறுமுகம் ஆஜரானார். பின்னர் சிறிது நேரத்தில் அவரது வக்கீல்களை தவிர உள்ளே சென்ற எம்.பி.க்கள் கே.பி.ராமலிங்கம்,ஆதிசங்கர் உள்பட மற்றவர்களை போலீசார் வெளியே அனுப்பிவிட்டனர்.
காலை.10.30 மணிக்கெல்லாம் உதவி ஆணையாளர் பிச்சை, வீரபாண்டி ஆறுமுகத்திடம் விசாரணையை தொடங்கினார். இதற்கான கேள்விகளையெல்லாம் அவர்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்தனர். விசாரணையை பதிவு செய்ய வீடியோ கிராபர் அனுமதிக்கப்பட்டார். மேலும் வீரபாண்டி ஆறுமுகத்தின் உடல் நிலையை கருத்தில் கொண்டு போலீசார் டாக்டர்கள் நாகராஜ், கண்ணன்,கோகிலா அடங்கிங்கிய மருத்துவ குழுவினரை காவல் நிலைய வளாகத்திலேயே ஏற்பாடு செய்திருந்தனர். அவர்கள் தங்களது மருத்துவ வாகனத்தோடு அங்கு காத்திருந்தனர். அதே போல் வீரபாண்டி ஆறுமுகமும் தன்னுடைய மருத்துவ குழுவினரையும் உடன் அழைத்து வந்திருந்தார். இந்த மருத்துவ குழுவினர் 6 மணி நேரத்திற்கு ஒரு முறை அவரை பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
விசாரணை குறித்து துணை கமிஷனர் பாஸ்கரனிடம் நிருபர்கள் கேட்டதற்கு முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுத்திடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறார்.தொடர்ந்து அவரிடம் உதவி கமிஷனர் பிச்சை, இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையில் எந்த பிரச்சனையும் இல்லை. அவருக்கு தேவையான உணவை நாங்கள் தயார் செய்து வைத்துள்ளோம். அவருக்கும் வீட்டில் இருந்து உணவு வருகிறது எது தேவையோ அவர் அதை சாப்பிடலாம். காலையில் விசாரணை தொடங்கிய சிறித நேரம் கழித்து அவருக்கு ஒய்வு கொடுக்கப்பட்டது .அப்போது அவர் மருந்து,மாத்திரைகள் சாப்பிட்டார். பின்னர் மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது. என்றார்.
நேற்று காலை 12 மணிக்கு வீரபாண்டி ஆறுமுகத்தை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். பின்னர் இரவு 7 மணியளவிலும் பரிசோதனை செய்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் காவல்நிலையத்தை சுற்றிலும் 200 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.