எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை - 28 - சென்னையில் வரும் 30-ந் தேதி சி.பி.எம். கட்சியின் சார்பில் இலங்கை தமிழர் சம உரிமை அரசியல் தீர்வு சிறப்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் பங்கேற்கிறார். இதுகுறித்து கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் என். சீனிவாசன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் என். வரதராஜன், டி.கே.ரங்கராஜன் எம்.பி., உ.வாசுகி உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு;
தமிழக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு சமச்சீர் கல்வித்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்திட வேண்டுமென்றும், சமச்சீர் கல்வியின் ஒரு அம்சமான பொதுப்பாடத்திட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே செயல்படுத்திட வேண்டுமென்றும் அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக பாடப்புத்தகங்களை வழங்கிட வேண்டுமென்றும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தினை செயல்படுத்தும் வகையில் வழிகாட்டுதல் நெறிமுறைகளை உடனடியாக உருவாக்கிட வேண்டுமென்றும் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
மத்திய அரசு செயல்படுத்தி வரும் தாராளமயக் பொருளாதாரக் கொள்கையினால் வறுமை, வேலையின்மை அதிகரித்துள்ளது, உணவுப்பொருட்கள் உள்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்து வருகின்றன. விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. ஏழைஎளிய உழைப்பாளி மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரம் சரிந்து வருகிறது. அதே சமயம் சட்ட விரோதமாக பொதுச்சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன, உயர்மட்டத்தில் நடந்துள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல், முதல் சட்டவிரோத கனிம சுரங்கத்தொழில் மற்றும் இரும்புத்தாது ஏற்றுமதி ஊழல் வரை வரலாறு காணாத ஊழல்கள் வெளிப்பட்டுள்ளன.
இத்தகைய ஊழலை எதிர்த்தும், ஊழல் செய்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்திட
லோக்பால் மசோதாவை(பிரதமரையும் விசாரணை வரம்புக்குள் கொண்டுவரும் வகையில்)
பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றுவது , தேசிய நீnullதித்துறை கமிஷன் அமைப்பது, தேர்தல் சீர்திருத்தங்களை கொண்டு வருவது, பொதுச்சொத்துக்கள் சூறையாடப்படுவதை தடுப்பது, வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப்பணத்தை கைப்பற்றுவது ஆகியவற்றை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி இயக்கங்கள் ஜூலை 15 முதல் 21 வரை ஒருவார காலம் நாடு தழுவிய விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தை நடத்தியுள்ளன. தமிழகத்தில் நுற்றுக்கணக்கான மையங்களில் தர்ணாஆர்ப்பாட்டம் மற்றும் பிரச்சார இயக்கங்கள் நடத்தப்பட்டன. அனைத்து மட்ட ஊழலை ஒழித்திடவும், அரசியலில் நேர்மையை வலியுறுத்தியும், இதற்கு ஆதரவாக மக்களை அணி திரட்டிடவும் தமிழகத்தில் மேற்கண்ட இயக்கத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல கட்சி அணிகளை மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
நிலமோசடியைத் தடுத்திடுக :
தமிழகத்தில் நிலப் பறிப்பு, நில மோசடி குறித்து 2000-க்கும் மேற்பட்ட புகார்கள் காவல்துறைக்கு
வந்துள்ளதாகத் தெரிகிறது. முன்னாள் தி.மு.க. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்டு பலர் மீது புகார்கள் உள்ளன. இதற்கு முன்னரும் பல்வேறு புகார்கள் நிலுவையில் உள்ளன. எனவே, நிலப்பறிப்பு மற்றும் மோசடி செய்தவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிலம் மீண்டும் கிடைப்பதை உறுதிப்படுத்திட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.
இலங்கையில் அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையிலான ஆயுத மோதல்கள் முடிவுற்று, இரண்டு ஆண்டுகளாகியும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு சம உரிமை, அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகள் இலங்கை அரசால் மேற்கொள்ளப்படவில்லை. இந்திய அரசும், ராஜிய உறவுகளை பயன்படுத்தி இலங்கை அரசை வலியுறுத்துவதில்லை. எனவே, இலங்கை தமிழ் மக்களுக்கு சம அந்தஸ்து, சம உரிமை உள்ளிட்ட அதிகாரங்களைக் கொண்ட மாநில சுயாட்சி அளித்திடும் வகையில் நிரந்தர அரசியல் தீர்வு காண வலியுறுத்தியும், இன்னும் முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு மறுவாழ்வு அளித்திடக்கோரியும், ஆயுத மோதலின் இறுதிக்கட்டத்தில்
நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் மீது சுயேச்சையான, நேர்மையான விசாரணை நடத்திட
வலியுறுத்தியும் இலங்கைத் தமிழர் சமஉரிமைஅரசியல் தீர்வு சிறப்பு மாநாடு நடத்துவதென்று
மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது.
2011, ஜூலை 30 பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை பெரியார் திடலில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷணன் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் கட்சியின் அகில இந்திய
பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், இலங்கை தமிழ்க் குடியரசுக் கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தம்
உள்ளிட்டு பல தலைவர்களை பங்கேற்கச் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கை எடுத்திடுக :
மதுரை மாவட்டம், பொதும்பு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் பள்ளி
மாணவிகளை, பள்ளியின் தலைமையாசிரியர் தொடர்ச்சியாகப் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார் என்ற செய்தி வன்மையான கண்டனத்திற்குரியது. மாணவிகளுக்கு நேர்ந்துள்ள கொடுமை அவர்களது கல்வி தொடர்வதிலேயே கூட தடைகளை ஏற்படுத்தும். மிகுந்த மனஉளைச்சலையும், nullநீண்ட கால தாக்கத்தையும் உருவாக்கும். எனவே, இந்த கொடூரமான குற்றத்தை இழைத்த தலைமை ஆசிரியரை உடனடியாக கைது செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், சட்டப்படி குழந்தைகளையும், பெற்றோர்களையும அவர்கள்
குடியிருக்கும் இடத்திலேயே விசாரிப்பதுடன் தகுந்த பாதுகாப்பும் அளித்திட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.
மேலும்,அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்ட உண்மையறியும்
குழுவினரிடம் பாதிக்கப்பட்ட மாணவிகளும், பெற்றோரும் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களைக் கூறியுள்ளனர். எனவே, அந்தப்பள்ளியில் பல குழந்தைகளுக்கு இழைக்கப்பட்டிருக்கும் பாலியல் ரீதியான குற்றங்களை காவல்துறை ஒரு குழு அமைத்து விசாரித்து, வழக்கு விசாரணையை மேற்கொள்ள உத்தரவிட வேண்டுமென்றும், பொதுவாக பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இத்தகைய பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதைத் தடுப்பதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.