முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரபாண்டி ஆறுமுகம் தினமும் காவல் நிலையத்தில் ஆஜராக கோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 28 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சேலம் ஜூலை.- 28 - முன்னாள் தி.மு.க.அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தினமும் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக சேலம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சேலம் அங்கம்மாள் காலனி நிலம் அபகரிப்பு மற்றும் பிரிமியர் ரோவர் மில் விற்பனை தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் தி.மு.க.அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது மாநகர மத்திய குற்றப்பரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த இருவழக்குகளிலும் முதல் குற்றவாளியாக உள்ள அவர் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க சென்னை ஐ கோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஜட்ஜ் ராஜசூர்யா வீரபாண்டி ஆறுமுகம் கடந்த 25.7.11 ந் தேதி 10 மணிக்குள் சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக வேண்டும்.போலீசாரின் காவலுக்கு 3 நாள் சென்று விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். பின்னர் போலீசார் 27 ந் தேதி மாலை 5 மணிக்கு அவரை சேலம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜரப்படுத்த வேண்டும் வீரபாண்டி ஆறுமுகம் ரூ25 ஆயிரத்திற்கான சொந்த ஜாமீனிலும்,  அதே மதிப்பிலா 2 தனி நபர் ஜாமீனிலும் செல்லவும் மறு உத்தரவு வரும் வரை காலை 10 மணிக்கு தினமும் மத்திய குற்றப்பிரிவு போலீசில்  ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி போலீசார் நேற்று மாலை 3 நாள் விசாரணையை முடித்துக் கொண்டு சேலம் மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 5 ல் அவரை ஆஜர்படுத்தினர்.பின்னர் அவர் சென்னை ஐ கோர்ட் உத்தரவின் படி ஜாமீனில் சென்றார்.

இன்று முதல் காலை 10 மணிக்கு அவர் சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி கையெழுத்திட உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்