எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை - 28 - மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியபோதும், தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் நலனை முன்னிட்டு பேருந்து கட்டணத்தை உயர்த்தாத தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர். இளைஞரணி நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. அ.தி.மு.க. நிரந்தரப் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் மேலான ஆணைங்கிணங்க எம்.ஜி.ஆர். இளைஞர் அணியின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை நிலையத்தில் நேற்று காலை 10 மணிக்கு நடைப்பெற்றது. இதில் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஆதிராஜாராம் தலைமை தாங்கினார். கே.ஏ.கே.முகில், என்.சதன் பிரபாகரன், செவ்வை மு.சம்பத்குமார் ஆகிய இளைஞரணி செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் எஸ்.ராஜலிங்கம் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை வரவேற்றார். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட அ.தி.மு.க. அவை தலைவர் இ.மதுசூதனன், அமைப்பு செயலாளர்கள் சி.பொன்னையன், இ.வி.கே.சுலோச்சனா சம்பத், பா.வளர்மதி எம்.எல்.ஏ., மற்றும் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அ.தமிழ்மகன் உசேன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். திருச்சி மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் எஸ்.பத்மநாபன் நன்றியுரை வழங்கினார். பின்னர் இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில், மைனாரிட்டி தி.மு.க.வின் பணபலத்தையும், அராஜகத்தையும் தூள் தூளாக்கும் வகையில், தமிழகம் முழுவதும் தொடர் பிரச்சார சுற்றுப்பயணம் செய்து, வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று அயராமல் போராடி, அ.தி.மு.க.வையும், கூட்டணி கட்சியினரையும் வெற்றி பெற வைத்து, கருணாநிதியின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவுகட்டி, மகத்தான சாதனை படைத்துள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தமிழக முதல்வருக்கு, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தனது நன்றி நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறது.
இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்த போர்க் குற்றவாளி ராஜபக்ஷேவை, குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வேண்டுமென்று, ஐ.நா. சபையை வலியுறுத்த வேண்டியும், இலங்கைத் தமிழர்கள் வாழ்விடங்களில் சுதந்திரமாக வாழ அனுமதிக்கப்பட வேண்டும், அதற்கு இணங்க மறுக்கும் ராஜபக்ஷே அரசு மீது, இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்று மத்திய அரசினை வலியுறுத்தும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து, அதை ஏக மனதாக நிறைவேற்றி, டெல்லி சென்று பிரதமர் மன்மோகன்சிங்கிடம் மத்திய அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நேரில் வலியுறுத்தியதோடு, தன்னை சந்திக்க வந்த, அமெரிக்க வெளி விவகாரத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டனிடம் விவாதித்ததின் மூலம் அமெரிக்க நாடாளுமன்ற வெளி விவகாரக்குழு, இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற, அடிப்படை அமைத்துக் கொடுத்த, உலகத் தமிழர்கள் போற்றும் உன்னதத் தலைவி தமிழக முதல்வர் சாதுர்யமிக்க பேராற்றல் கண்டு, உலகத் தமிழர்கள் தங்கள் வாழ்வில் நிம்மதி கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இலங்கையில் முள்வேலி முகாம்களில் சித்திரவதை அனுபவித்து வரும் தமிழர்கள் அனாதைகள் அல்ல! அவர்களை காக்க, தாய் தமிழகத்தின் முதல்வர் இருக்கிறார் என்ற நம்பிக்கை தந்து, அரும்பெரும் சாதனை செய்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நன்றி தெரிவித்து கொள்கிறது.
தமிழக முதல்வர், தலைநகர் டெல்லி சென்றபோது, ஜெயலலிதா தங்கியிருந்த, தமிழ்நாடு இல்லத்திற்கே பிரதமர் அலுவலக சிறப்பு காரினை அனுப்பி அழைத்ததோடு, வீட்டு வாயிலில் காத்திருந்து பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் வரவேற்றது எந்த முதலமைச்சருக்கும், இதுவரை அளிக்கப்படாத சிறப்பு வரவேற்பு என்று தலைநகரத்து பத்திரிகைகள் பாராட்டுகின்றன.
உலக வல்லரசுகளுக்கெல்லாம் தலைமையான அமெரிக்க அதிபர் பாரக் ஓபாமாவுக்கு அடுத்த நிலையில் இருக்கும், அமெரிக்க அரசின் வெளி விவகாரத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன், சென்னை வந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, அலுவலகத்தில் சந்தித்து, ஒரு மணி நேரம் விவாதித்து ஜெயலலிதாவின் செயலாற்றலை பாராட்டி, மகிழ்ந்து, உடனடியாக, இலங்கைமீது பொருளாதாரத்தடை விதிக்கச் செய்ததை கூர்ந்து கவனித்தால், எந்தொரு மாநில முதலமைச்சருக்கும், அரசியல் தலைவருக்கும் இந்தியாவில் இதுவரை கிடைக்காத சிறப்பு ஆகும்.
இந்தியாவை வழி நடத்துகின்ற அறிவாற்றல் மிக்க தேசத் தலைவியாக தமிழக முதல்வர் ஜெயலலிதா உயர்ந்தோங்கி நிற்கிறார் என்று இந்தியா முழுவதும் உள்ள பத்திரிக்கைகளும், ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருவதை அளப்பரிய உவகையாக அமைந்துள்ளது.
அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்த நோக்கத்தோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் மாற்றம் செய்தாரோ, அந்த நோக்கம் நிறைவேறும் வகையில், எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு ஜெயலலிதா, இந்திய அரசியலை தீர்மானிக்கும் மகாசக்தியாக உருவாகி விட்டார் என்பதை எவரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாதென்பதை எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பெருமிதத்துடன் பறைசாற்றிக் கொள்கிறது.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களின் நலன் காக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பெற்றுத் தந்த, திராவிட இயக்க சரித்திர சாதனையான 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான சட்ட பாதுகாப்பை தொடர்ந்து நிலை நிறுத்தும் வகையில், ராஜ தந்திரத்தோடு சரியான நேரத்தில் உரிய ஆணையை இயற்றி, இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களின் வழி காட்டியாக, காவல் அரணாக, திகழும் சமூக நீnullதி காத்த வீராங்கனை, திராவிட இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நன்றி தெரிவித்து கொள்கிறது.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்தவாறு, மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மோசடியாக நில ஆக்கிரமிப்பு செய்தவர்கள்மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், நிலத்தை பறிகொடுத்தவர்களுக்கு அவர்களின் நிலம் கிடைக்கவும், காவல்துறையில் நில ஆக்கிரமிப்பு தடுப்பு பிரிவு ஏற்படுத்தியும், சிறப்பு nullநீதிமன்றம் அமைக்க உடனடி நடவடிக்கை எடுத்தும், சாதனை படைத்துவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நன்றி தெரிவித்து கொள்கிறது.
அவசரத்தில் அள்ளித் தெளித்த மாக்கோலம் போல, கருணாநிதி தலைமைச் செயலகம் கட்டுவதாகக் கூறி, தான்தோன்றித்தனமாக மனம் போன போக்கில், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்த பழமை வாய்ந்த கட்டிடங்களை இடித்து தள்ளிவிட்டு, அரைகுறை கட்டிடம் கட்டி, சினிமா செட்டிங் போட்டு, பிரதமரை ஏமாற்றி புதுமனை புகுவிழா நடத்தி, தலைமை செயலகம் மாற்றி விட்டேன் என்று அறிவித்து, அரசு பணத்தினை ஊதாரித்தனமாக 1000 கோடிகளுக்கு மேல் செலவழித்ததில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை, ஊழல்களை விசாரணை செய்ய nullநீதிபதி தங்கராஜ் தலைமையில், விசாரணைக் கமிஷன் அமைத்திட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
மத்திய அரசு, பெட்ரோல், டீசல், கேஸ், மண்ணெண்ணெய் விலைகளை தாறுமாறாக உயர்த்தி மக்கள்மீது கடும் விலையேற்றத்தை திணித்து, பாதிப்புக்குள்ளாக்கி உள்ள நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு மீது, இதுவரை விதிக்கப்பட்டு வந்த மதிப்பு கூட்டுவரி (வாட்) முழுவதும் nullநீக்கம் செய்து, இனி தமிழ்நாட்டில் சமையல் எரிவாயுமீது வாட் வரி இல்லை என்று அறிவித்து, ஏழைஎளிய மக்கள் குறிப்பாக, தாய்மார்கள் நெஞ்சில் பால் வார்த்துள்ளார்கள். அதுபோலவே, டீசல் விலையை மத்திய அரசு உயர்த்திய பின்னரும், தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயராமல் பாதுகாத்துள்ளார். கருணாநிதி கட்சி அங்கம் வகிக்கும் மத்திய அரசின், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து தமிழக மக்களை காத்து வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நன்றி தெரிவித்து கொள்கிறது.
மத்திய அரசிலும், காங்கிரஸ் கூட்டணியிலும் பங்கேற்று பதவி சுகம் அனுபவித்துக் கொண்டு, விலைவாசி உயர்வுகளுக்கு கூட்டுப் பொறுப்பேற்க வேண்டிய கருணாநிதி தன் கட்சி பொதுக் குழுவில் மத்திய அரசு அடிக்கடி ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருவதாக கபட தீர்மானம் இயற்றி, தன் பொறுப்பை தட்டிக்கழிக்கும் இழி செயலை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி கடுமையாக கண்டிக்கின்றது.
ஜெயலலிதா, தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற குறுகிய காலத்திற்குள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்த தேர்தல் வாக்குறுதிகள் அத்தனையும் நிறைவேற்றி சாதனை படைத்து வருவதையும், கழக அரசின் பட்ஜெட் மூலம் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்துவதையும், அ.தி.மு.க. செயற்குழு தீர்மானங்களையும் பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் தொடர் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
எதிர்வரும் தமிழக உள்ளாட்சி தேர்தல்களில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர், தமிழக முதல்வர் அறிவிக்கின்ற வேட்பாளர்கள் அனைவரையும், வெற்றிப் பெறச் செய்து, வெற்றிக் கனியை ஜெயலலிதாவுக்கு மலர் பாதங்களில் சமர்ப்பிக்க, கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சபதமேற்று உழைக்க உறுதியேற்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி6 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 5 hours ago |
ரவா பர்பி1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து: சந்திரசேகர ராவ் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
17 Apr 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக வந்த புகாரையடுத்து சந்திரசேகரராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம்
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
கோவையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் வாக்கு சேகரிப்பு
17 Apr 2024கோவை : கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? - எடப்பாடி பழனிசாமி பேட்டி
17 Apr 2024சேலம் : மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
-
சிறையில் இருந்தே ஆட்சி செய்ய கெஜ்ரிவாலை அனுமதிக்க வேண்டும் : டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி மனு
17 Apr 2024புதுடெல்லி : சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி கட்சி மனுத்தாக்கல் செய்துள்ளது.