முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருகிற 5ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

செவ்வாய்க்கிழமை, 2 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஆக,2 - 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கும் நாடு தழுவிய வேலை நிறுத்தம் வருகிற 5 ம் தேதி நடைபெறுகிறது.

  பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கிராமிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் 10 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள், மத்திய அரசின் மக்கள் விரோத, தேச விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், வங்கி சீர்திருத்த நடவடிக்கைகளை கைவிட வேண்டும்,  பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது, வங்கியின் பணிகளை தனியார் ஏஜென்சிகளிடம் கொடுக்க கூடாது, கத்தேல்வால் குழு நிலுவையிலுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மதுரை அண்ணாநகர் ஐஓபி வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இன்று மதுரை ஜான்சி ராணிபூங்காவிலிருந்து மாபெரும் பேரணி நடைபெறுகிறது.

    வருகிற 4 ம் தேதி மாலையில் அந்தந்த வங்கிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. வருகிற 5 ம் தேதி இந்தியா முழுவதும்  10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கும் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. அன்று மதுரை ஸ்டேட் வங்கி மெயின் கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போராட்ட குழு கன்வீனர் எம்.சுந்தர்ராஜன், ஐஒபி அலுவலர் சங்க துணை பொதுச்செயலாளர் எஸ்.வீரராகவன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் ஊழியர்கள்கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்