முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஞ்சிய போட்டிகளில் வெற்றி பெறுவோம்: பிரவீண்குமார்

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

நார்த்தாம்ப்டன்,ஆக.6 - இங்கிலாந்துடனான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் மீண்டு எழுந்து எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெறுவோம் என்று இந்திய கிரிக்கெட் வீரர் பிரவீண்குமார் கூறினார். இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் டெஸ்ட் தொடர் இப்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று 2 - 0 என்ற கணக்கில் வலுவாக உள்ளது. எனவே அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளையும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் கூறிய பிரவீண்குமார், லார்ட்ஸ், டிரெண்ட்பிரிட்ஜில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்தது. ஆனால் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் நாங்கள் மீண்டெழுந்து வெற்றி பெறுவோம் என்றார். அந்த 2 போட்டிகளையும் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளோம் என்றார். முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் பிரவீண்குமார் 13 விக்கெட்டுகளை சாய்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்