முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோத்தபயவை பிரதமராக்க ராஜபக்சே திட்டம்?

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, ஆக. 6 - தனது சகோதரரும், பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபய ராஜபக்சேவை பிரதமராக நியமிக்க இலங்கை அதிபர் ராஜபக்சே திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. விடுதலைப் புலிகளுடனான போரை முடிருக்கு கொண்டு வந்தவர்களில் முக்கியமானவர் கோத்தபய . புலிகளை முறியடிப்பதாகக் கூறிக் கொண்டு ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இவரை பிரதமராக்க ராஜபக்சே முயல்வதாக தெரிகிறது. 

இலங்கையில் விரைவில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாற்றத்தின் போது, தனது சகோதரரை பிரதமராக்க ராஜபக்சே திட்டமிட்டு இருக்கிறார். 

இது குறித்து இலங்கை அரசில் ஆதிக்கம் செலுத்தும் முக்கியமான பெளத்த பிக்குகளிடம் ராஜபக்சே ஆலோசனை நடத்தி உள்ளார். போர்க் குற்றம் தொடர்பாக இலங்கை மீது சுமத்தப்படும் சர்வதேச குற்றச் சாட்டுகளை சமாளிக்க வசதியாக கோத்தபயவை பிரதமராக்க முயல்வதாகத் தெரிகிறது. 

மேலும், கோத்தபயவுக்கு முக்கிய பொறுப்பு தரவேண்டும் என ராஜபக்சே குடும்பத்திற்குள்ளும் நெருக்குதல் தரப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்