முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவையில் அனுமதின்றி இயங்கிய வெடிமருந்து தொழிற்சாலை

சனிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, ஆக.7 - புதுவையில் அனுமதி இன்றி இயங்கிய வெடிமருந்து தொழிற்சாலையை போலீசார் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். புதுவையில் வெடிகுண்டு வீசி ஆட்களை கொல்வது அதிகரித்து வருவகிறது. எதிராளிகளை வெடிகுண்டு வீசி நிலை குலையச்செய்து அதன் பின்னர் அவர்களை வெட்டிக் கொல்வது வழக்கமாகி வருகிறது. 

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பார்சலில் வெடிகுண்டு அனுப்பி அரியாங்குப்பத்தில் ஜோதி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து போலீசார் வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் வெடி பொருட்கள் எங்கிருந்து யார்-யாருக்கு சப்ளை செய்யப்படுகிறது என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். 

மேலும் கோவில் விழாக்களுக்கு பட்டாசு தாயரிக்கும் நபர்களிடமும் விசாரணை நடத்தி னர். இது மட்டுமில்லாமல் அவர்கள் நடத்தி வரும் பட்டாசு தொழிற்சாலை மற்றும் வெடிமருந்து குடோன்களிலும் சோதனை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில் புதுவை முருங்கப்பாக்கம் அருகே உள்ள ஒட்டன்பாளையத்தில் ஒரு தென்னந்தோப்பில் அரசு அனுமதி இன்றி வெடிமருந்து தொழிற்சாலை இயங்குவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அணில்குமார், முருகசாமி மற்றும் போலீசார் நேற்று அதிகாலை அந்த வெடிமருந்து தொழிற்சாலையை முற்றுகையிட்டு சோதனை நடத்தினர். 

அப்போது போலீசாரை பார்த்ததும் வெடிமருந்து தொழிற்சாலையை நடத்தி வந்த முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சண்முகம்(28) என்பவர் தப்பி ஓடிவிட்டார். அங்கு வேலை பார்த்து வந்த முருங்கப்பாக்கம் பள்ளத்தெருவை சேர்ந்த பாஸ்கர்(19) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். 

விசாரணையில், அரசு அனுமதி இன்றி வெடிமருந்து தொழிற்சாலை இயங்கியதும், இந்த வெடிமருந்து தொழிற்சாலையில் இருந்து கோவில் விழாக்களுக்கு பயன்படுத்தப்படும் பட்டாசுகள் தயாரித்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து பாஸ்கரை போலீசார் கைது செய்தனர். அங்கு தயாரித்து வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் மற்றும் பட்டாசு தயாரிக்க பயன்படும் 50 கிலோ வெடிமருந்து, பட்டாசு திரி போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சமாகும். 

அனுமதி இன்றி இயங்கிய இந்த தொழிற்சாலைக்கு எங்கிருந்து வெடிமருந்து பெறப்பட்டது. மேலும் இந்த வெடிமருந்துகள் ரவுடிகளுக்கு வெடிகுண்டு தயாரிக்க சப்ளை செய்யப்பட்டு இருக்கலாமா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையடுத்து தப்பி ஓடிய சண்முகத்தை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் பிடிபட்ட பின்னரே ரவுடிகளுக்கு வெடிகுண்டு தயாரிக்க வெடிமருந்து சப்ளை செய்யப்பட்டதா? என்ற உண்மை தெரியவரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago