முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோனி வித்தியாசமான கேப்டன்: பாண்டிங்

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

மெல்போர்ன்,ஆக.10 - இந்திய கேப்டன் தோனி வித்தியாசமானவர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் பாண்டிங் கூறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரன் அவுட்டான பெல்லை மீண்டும் விளையாட அழைத்ததை சுட்டிக் காட்டி அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். 2 வது டெஸ்ட்டில் கடைசி பந்து பவுண்டரிக்கு சென்று விட்டதாக நினைத்து பெல்கிரீசுக்கு வெளியில் நிற்க ரன் அவுட்டானார். ஆனால் இது கவனக்குறைவால் நிகழ்ந்த தவறு என்று தெரிவிக்கப்பட்டதும் அவரை மீண்டும் விளையாட அழைத்தார் தோனி. இதற்காக தோனிக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இப்போது அந்த பட்டியலில் ரிக்கி பாண்டிங்கும் சேர்ந்துள்ளார். இது குறித்து பாண்டிங் கூறியதாவது, 

கிரிக்கெட் விளையாட்டில் மிக சரியாக நடந்து கொண்டு தான் வித்தியாசமானவர் என்பதை தோனி நிரூபித்துள்ளார். இந்த ஆண்டு கடைசியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்று பயணம் மேற்கொள்கிறது. இப்போட்டியை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வலுவான பேட்டிங் வரிசை கொண்ட இந்திய அணியுடன் மோதுவது சவாலானதுதான். ஆனால் சவாலை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும் என்றார். மேலும் அவர் கூறுகையில், எனது கிரிக்கெட் வாழ்வில் எத்தனையோ மகிழ்ச்சியான தருணங்களை சந்தித்திருக்கிறேன். ஆனால் 3 ஆண்டுகளுக்கு முன் எனது மகள் பிறந்த போது கிடைத்த மகிழ்ச்சி வேறு ஏதும் ஈடில்லை. மகிழ்ச்சியான குடும்பம் அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும். அது எனக்கு அமைந்திருக்கிறது என்று அவர் மகிழ்வுடன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்