முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.க்கு எதிரான டி-20 போட்டியில் இலங்கை வெற்றி

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

பல்லேகெலே, ஆக. 10 - ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பல்லேகலேரில் நடைபெற்ற 2-வது 20-க்கு 20 போட்டியில் இலங்கை அணி 8 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் இலங்கை அணி தரப்பில், துவக்க வீரராக இறங்கி ய ஜெயவர்த்தனே அதிரடியாக ஆடி அரை சதம் அடுத்து அணிக்கு நல் ல துவக்கத்தை அளித்தார். கீப்பர் சங்கக்கக்கரா மற்றும் சண்டிமால் ஆகியோர் அவருக்குப் பக்கபலமாக ஆடினர். 

பின்பு பெளலிங்கின் போது, இளம் சுழற் பந்து வீரரான மென்டிஸ் நன்கு பந்து வீசி 6 முக்கிய விக்கெட்டைக் கைப்பற்றி அணியை வெற் றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். பெரீரா மற்றும் ஹெராத் ஆகி யோர் அவருக்கு ஆதரவாக பந்து வீசினர். 

கேப்டன் கிரேக் ஒயிட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கும் கே ப்டன் தில்ஷான் தலைமையிலான இலங்கை அணிக்கும் இடையே யான 2  - வது ஒரு நாள் போட்டி பல்லேகலெ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. 

முன்னதாக இதில், டாசில் வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை அணி தரப்பில், ஜெயவர்த்தனே மற்றும் தில்ஷான் இருவரு ம் ஆட்டத்தை துவக்கினர். இறுதியில் அந்த அணி, 20 ஓவரில் 9 விக்கெ ட் இழப்பிற்கு 157 ரன்னை எடுத்தது. 

இலங்கை அணி சார்பில், துவக்க வீரராக இறங்கிய ஜெயவர்த்தனே 63 பந்தில் 86 ரன்னை எடுத்தார். இதில் 12 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அட க்கம். இறுதியில் அவர், பிரட் லீ வீசிய பந்தில் ஹஸ்சேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

அடுத்தபடியாக கீப்பர் சங்கக்கரா 16 பந்தில் 24 ரன்னை எடுத்தார். இதி ல் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, சண்டிமால் 11 பந்தில் 13 ரன்னை எடுத்தார். மற்ற வீரர்கள் ஓரிலக்க எண்ணிலேயே ஆட்டம் இழந்தனர். 

ஆஸ்திரேலிய அணி தரப்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான பிரட்லீ 39 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். ஹாஸ்டிங்ஸ் 14 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, ஜான்சன், ஸ்மித் மற் றும் ஓகெப்பே ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

ஆஸ்திரேலிய அணி 158 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை இலங்கை அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்னை எடுத்தது. 

இதனால் இலங்கை அணி இந்த 2 -வது போட்டியில் 8 ரன் வித்தியாசத் தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

ஆஸ்திரேலிய அணி சார்பில், துவக்க வீரர் வாட்சன் அதிகபட்சமாக, 24 பந்தில் 57 ரன்னை எடுத்தார். கேப்டன் ஒயிட் 32 பந்தில் 39 ரன்னைஎடுத்தார். தவிர, வார்னர் 16 ரன்னையும், ஸ்மித் 12 ரன்னையும் எடுத்த னர். 

இலங்கை அணி தரப்பில், முன்னணி சுழற் பந்து வீச்சாளரான மென்டி ஸ் அபாரமாக பந்து வீசி 16 ரன்னைக் கொடுத்து 6 விக்கெட்டைக் கை ப்பற்றினார். தவிர, சி.பெரீரா மற்றும் ஹெராத் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக மென்டி ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்