முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நந்தா - பூர்ணா நடிக்கும் `வேலூர் மாவட்டம்'

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை,ஆகஸ்ட்,14 - ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ்.அகோரம் வழங்கும் `வேலூர் மாவட்டம்'  படத்தின் அனைத்துக்கட்ட வேலைகளும் முடிவடைந்தது. திரைக்கு வர தயாராக இருக்கும் இந்தப் படத்தில் நந்தா ககாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக பூர்ணா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் சந்தானம் நடிக்கிறார். மற்றும் அழகம் பெருமாள், ஜி.எம்.குமார், நீலகண்டன், சிங்கமுத்து, சாமிநாதன், ராணி, ஸ்ரீமான், என்.எல்.சீனிவாசன், நந்தா சரவணன், வி.ஞானவேல், கசாலி, அப்பல்லோ ரவி, பாய்ஸ் ராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள்.  

ஒளிப்பதிவு- வெற்றி, இசை- சுந்தர் சி.பாபு, எடிட்டிங்- சுராஜ்கவி, பாடல்கள்- நா.முத்துக்குமார், தாமரை, கவிவர்மன், விவேகா, எழிலரசு, கலை- எம்.ஜி.முருகன், நடனம்- தினேஷ், விஷ்ணுதேவ், சரவணராஜன், பாபாபாஸ்கர், ஸ்டன்ட்- திலீப் சுப்பராயன், தயாரிப்பு மேற்பார்வை- எம்.செந்தில்குமார், நிர்வாக தயாரிப்பு- எஸ்.எம்.வெங்கட்மாணிக்கம், கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்பேற்றிருப்பவர்- ஆர்.என்.ஆர்.மனோகர், இவர் நகுல் நடித்து வெற்றி பெற்ற மாசிலாமணி படத்தை இயக்கியவர். இவர் அடுத்து இயக்கி இருக்கும் படம் இது. 

இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, டெல்லி, மதுரா, ஆக்ரா, சிக்மகளூர் மற்றும் வேலூர் போன்ற ஊர்களில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இப்படத்திற்காக சமீபத்தில் பரபரப்பான சண்டைக் காட்சி ஒன்று வேலூரில் படமாக்கப்பட்டது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மீன் மார்க்கெட் ஒன்றுக்குள் புகுந்த தீவிரவாதி ஒருவன் பாம் வைக்க எடுக்கும் முயற்சிகளும், அதை காவல்துறை அதிகாரியான முத்துக்குமார் (நந்தா) எப்படி முறியடிக்கிறார் என்கிற காட்சி தியேட்டரில் கைதட்டல் வாங்கித் தரும். இதற்காக வேலூரில் நிஜ மீன் மார்க்கெட்டில் சேசிங் மற்றும் சண்டைக் காட்சிகள் பரபரப்பாக படமாக்கப்பட்டது. 

மிகப் பிரமாண்டமான முறையில் கல்பாத்தி எஸ்.அகோரம், எஸ்.கணேஷ், எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிக்கிறார்கள். போலீஸ் உயர் அதிகாரியாக பதவியேற்கும் முத்துக்குமார் தனது நேர்மையான நடவடிக்கையால் அரசியல்வாதிகளின் கோபத்திற்கு ஆளாகிறார். பிரபலமான அரசியல்வாதி ஒருவர் தனது பினாமியாக ஒருவரை வைத்துக் கொண்டு ஊழல், லஞ்சம் போன்ற சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். மக்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் அவரது முகமூடியை  கிழிக்கும் போலீஸ் அதிகாரியின் வீரதீர படம்தான் `வேலூர் மாவட்டம்'. கதர் சட்டையை போட்டு கட்சிக்காரர்களாய் தங்களை காட்டிக் கொண்டு திரியும் அவர்களை காக்கிச் சட்டை போட்ட கண்ணியமானவன் சட்டத்தின் முன் நிறுத்தும் உயரிய படம் `வேலூர் மாவட்டம்.'

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago