முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நல்லாட்சி மலர்ந்திருக்கிறது நல்லவை தொடரட்டும் டாக்டர்.சேதுராமனின் வாழ்த்து

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஆக.- 15 - நல்லாட்சி மலர்ந்திருக்கிறது நல்லவை தொடரட்டு என டாக்டர் .சேதுராமனின் தனது  சுதந்திரதினச் வாழ்த்து செய்தியில்  குறிப்பிட்டுள்ளார்.  இந்தியத்திருநாடு தனது 65-வது சுதந்திரதினத்தில் நடைபோடுகிறது.உலகையே உலுக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலால் ஒரு அவமானக் கறை, காமன்வெல்த் போட்டி முறைகேடு, ஊழலுக்கு எதிரான அன்னாஹாசாரேவின் போராட்டம், மும்பை குண்டு வெடிப்பு என அவலங்கள் தொடர்கிறது. தமிழ்நாடு மக்கள் சுதந்திர தாகத்தை சுவாசிப்பது சுகமாக இருக்கிறது. என அகில இந்திய மூவேந்தர் முன்னணிக்கழகத்தின் நிறுவனர் தலைவர் டாக்டர் .ந.சேதுராமன் தனது சுதந்திர தினச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், நில அபகரிப்பிலிருந்து விடுதலை, அராஜகத்திலிருந்து, விடுதலை, ஊழல்களிலிருந்து விடுதலை, அச்சுறுத்தல்களிலிருந்து விடுதலை, எனத்தமிழகம் நிம்மதியாக நிரந்திர விடுதலையை நோக்கி நடைபோடுவோம்.

மக்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள், வணிக நிறுவனங்கள் சுதந்திரமாக இயங்குகின்றன, தினத்தொழில் செய்வோர் நிம்மதிப்பெருமூச்சு விடுகின்றனர். அரிசி விற்பவன் முதல் ஆணி விற்பவன் வரை சுதந்திரமாக செயல்படுகிறார்கள். தமிழகத்து சுதந்திரக் காற்று இந்தியா முழுக்க பரவ வேண்டும் ஊழல், அராஜகம், வன்முறை, மோசடி இவைகளில் மீண்டெழுந்து உலகிற்கே தன் ஆற்றல் காட்டித் தலைமை ஏற்க நாம் அனைவரும் உழைப்போம் என தனது சுதந்திர வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்