முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாளை மத்திய சிறையில் கொலைவெறித் தாக்குதல் பொட்டுசுரேஷ்

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

நெல்லை ஆக - 15 - பாளை மத்திய சிறையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருக்கும் பொட்டு சுரேஷிற்கு ரகசியமாக வழங்கப்பட்ட செல்போன்,சிம்கார்டுகளை திருடி மறைத்து வைத்த ஆயுள் தண்டனை கைதி மீது கொலைவெறித்தாக்குதல் நடத்திய சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்தவர் பொட்டு சுரேஷ். இவர் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் வலதுகரமாவார். நிலமோசடி புகார் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்காக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் 8சி பிளாக்கில் அடைக்கபட்டுள்ளார். இவர் அழகிரிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் இவரை அழகிரி, மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் தி.மு.க. அமைச்சர்கள், சந்தித்து சென்றுள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் பொட்டு சுரேஷை முன்னாள் அமைச்சர்  ஐ.பெரியசாமி மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் சந்திக்க சென்றுள்ளனர். அப்போது உள்ளே சென்ற தி.மு.க.பிரமுகர்கள் பொட்டு சுரேஷிற்கு பார்சல் ஒன்றை வழங்கியுள்ளனர். அதில் உணவு பொருட்கள் உள்பட சிறைக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்களும் இருந்துள்ளது. இதனை அதே பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி பாளையங்கோட்டை சேர்ந்த பெருமாள் என்பவர் மகன் முத்துப்பாண்டி(24) பார்த்துள்ளார். இதனையறிந்த பொட்டு சுரேஷ் முத்துப்பாண்டியை அந்த இடத்தை விட்டு செல்லுமாறு கூறியுள்ளார். முத்துப்பாண்டியும் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றவர் என்பதால் பொட்டு சுரேஷிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 

பொட்டு சுரேஷ் முத்துப்பாண்டியை சரமாரியாக தாக்கியுள்ளார். இருவரும் கைகலப்பில் ஈடுபடவே அதே பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த மற்றவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே பொட்டு சுரேஷிற்கு கொடுத்த ரகசிய பார்சலில் ஒரு செல்போனும், சிம் கார்டும் 

இருந்துள்ளது. அதனை பொட்டு சுரேஷ் அந்த பிளாக்கில் ஒரு இடத்தில் மறைத்து வைத்துள்ளார். இதனை ரகசியமாக நோட்டமிட்ட முத்துப்பாண்டி பொட்டு சுரேஷிற்கு தெரியாமல் அந்த

 செல்போனையும் சிம்கார்டையும் எடுத்து வேறொரு இடத்தில் மறைத்து வைத்துக்கொண்டதோடு அதனை பயன்படுத்தி வெளியில் இருப்பவர்களும் தொடர்பு கொண்டதாக தெரிகிறது. அந்த சிம்கார்டு நம்பர் 9994006770 என்று கூறப்படுகிறது. தனது செல்போனும் சிம்கார்டும் காணமல் போனதால் மீண்டும் பொட்டு சுரேஷிற்கும், முத்துப்பாண்டிக்கு தகறாறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொட்டு சுரேஷ் சிறை வார்டன்கள் கொம்பையா, அருண்குமார் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். செல்போனையும், சிம்கார்டையும் மீட்காவிட்டால் அனைவரும் சிக்கலில் மாட்டிக்கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார். ரகசியமாக சிமாகார்டு செல் பயன்படுத்தப்பட்டது வெளியே தெரிந்தால் தங்களுக்கும் சிக்கல் என்று கருதியதால் வார்டன்கள் இருவரும் முத்துப்பாண்டியை கொத்தாக தூக்கிச்சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர். ஆனால் அவர் சிம்கார்டை மறைத்து வைத்த இடத்தை கூற மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் முத்துப்பாண்டியை பலமாக தாக்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் அடி தாங்க முடியாத முத்துப்பாண்டி தான் மறைத்து வைத்திருந்த பிளேடை கடித்து விழுங்கி விட்டார். இதனால் பதறிப்போன சிறைவார்டன்கள் அவரை சிறைக்குள் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இரண்டு நாட்களாக அவருக்கு அங்கேயே சிகிச்சையளித்துள்ளனர். அவர் தான் பிளேடை விழுங்கி விட்டதாக கூறியும் அதைபற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. இந்நிலையில் உடல்நிலை மிகவும் மோசமடைந்த முத்துப்பாண்டியை டாக்டர்கள் உடனடியாக பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கவில்லைசென்றால் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று எச்சரித்துள்ளனர். இதனால் வேறு வழியில்லாத சிறை அதிகாரிகள் முத்துப்பாண்டியை பாளை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சிறைக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்களை பொட்டு சுரேசஷிற்கு கொடுத்தது யார் என்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தி.மு.க.முக்கிய பிரமுகர்கள் பலர் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் காவல்துறை  மற்றும் சிறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்