எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்லை ஆக - 15 - பாளை மத்திய சிறையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருக்கும் பொட்டு சுரேஷிற்கு ரகசியமாக வழங்கப்பட்ட செல்போன்,சிம்கார்டுகளை திருடி மறைத்து வைத்த ஆயுள் தண்டனை கைதி மீது கொலைவெறித்தாக்குதல் நடத்திய சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்தவர் பொட்டு சுரேஷ். இவர் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் வலதுகரமாவார். நிலமோசடி புகார் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்காக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் 8சி பிளாக்கில் அடைக்கபட்டுள்ளார். இவர் அழகிரிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் இவரை அழகிரி, மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் தி.மு.க. அமைச்சர்கள், சந்தித்து சென்றுள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் பொட்டு சுரேஷை முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் சந்திக்க சென்றுள்ளனர். அப்போது உள்ளே சென்ற தி.மு.க.பிரமுகர்கள் பொட்டு சுரேஷிற்கு பார்சல் ஒன்றை வழங்கியுள்ளனர். அதில் உணவு பொருட்கள் உள்பட சிறைக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்களும் இருந்துள்ளது. இதனை அதே பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி பாளையங்கோட்டை சேர்ந்த பெருமாள் என்பவர் மகன் முத்துப்பாண்டி(24) பார்த்துள்ளார். இதனையறிந்த பொட்டு சுரேஷ் முத்துப்பாண்டியை அந்த இடத்தை விட்டு செல்லுமாறு கூறியுள்ளார். முத்துப்பாண்டியும் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றவர் என்பதால் பொட்டு சுரேஷிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த
பொட்டு சுரேஷ் முத்துப்பாண்டியை சரமாரியாக தாக்கியுள்ளார். இருவரும் கைகலப்பில் ஈடுபடவே அதே பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த மற்றவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே பொட்டு சுரேஷிற்கு கொடுத்த ரகசிய பார்சலில் ஒரு செல்போனும், சிம் கார்டும்
இருந்துள்ளது. அதனை பொட்டு சுரேஷ் அந்த பிளாக்கில் ஒரு இடத்தில் மறைத்து வைத்துள்ளார். இதனை ரகசியமாக நோட்டமிட்ட முத்துப்பாண்டி பொட்டு சுரேஷிற்கு தெரியாமல் அந்த
செல்போனையும் சிம்கார்டையும் எடுத்து வேறொரு இடத்தில் மறைத்து வைத்துக்கொண்டதோடு அதனை பயன்படுத்தி வெளியில் இருப்பவர்களும் தொடர்பு கொண்டதாக தெரிகிறது. அந்த சிம்கார்டு நம்பர் 9994006770 என்று கூறப்படுகிறது. தனது செல்போனும் சிம்கார்டும் காணமல் போனதால் மீண்டும் பொட்டு சுரேஷிற்கும், முத்துப்பாண்டிக்கு தகறாறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொட்டு சுரேஷ் சிறை வார்டன்கள் கொம்பையா, அருண்குமார் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். செல்போனையும், சிம்கார்டையும் மீட்காவிட்டால் அனைவரும் சிக்கலில் மாட்டிக்கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார். ரகசியமாக சிமாகார்டு செல் பயன்படுத்தப்பட்டது வெளியே தெரிந்தால் தங்களுக்கும் சிக்கல் என்று கருதியதால் வார்டன்கள் இருவரும் முத்துப்பாண்டியை கொத்தாக தூக்கிச்சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர். ஆனால் அவர் சிம்கார்டை மறைத்து வைத்த இடத்தை கூற மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் முத்துப்பாண்டியை பலமாக தாக்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் அடி தாங்க முடியாத முத்துப்பாண்டி தான் மறைத்து வைத்திருந்த பிளேடை கடித்து விழுங்கி விட்டார். இதனால் பதறிப்போன சிறைவார்டன்கள் அவரை சிறைக்குள் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இரண்டு நாட்களாக அவருக்கு அங்கேயே சிகிச்சையளித்துள்ளனர். அவர் தான் பிளேடை விழுங்கி விட்டதாக கூறியும் அதைபற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. இந்நிலையில் உடல்நிலை மிகவும் மோசமடைந்த முத்துப்பாண்டியை டாக்டர்கள் உடனடியாக பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கவில்லைசென்றால் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று எச்சரித்துள்ளனர். இதனால் வேறு வழியில்லாத சிறை அதிகாரிகள் முத்துப்பாண்டியை பாளை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சிறைக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்களை பொட்டு சுரேசஷிற்கு கொடுத்தது யார் என்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தி.மு.க.முக்கிய பிரமுகர்கள் பலர் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் காவல்துறை மற்றும் சிறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.