எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.- 17 - தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தினால் 227.35 கோடி ரூபாய் செலவில் காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள 400 கி.வோ துணை மின் நிலையத்தினை காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்து தமிழக மக்களுக்கு அர்ப்பணித்தார். தமிழகத்தில் நிலவி வரும் மின் பற்றாக்குறையை போக்கி, தமிழகத்தை மின்மிகு மாநிலமாக மாற்றிடவும், மாநிலம் முழுவதும் மின் விநியோகத்தை சீர்படுத்தி மக்களுக்கு தடையற்ற சீரான மின்சாரம் வழங்கிடவும், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. இந்த துணை மின் நிலையம் வடசென்னை அனல்மின் நிலையத்திலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தினை மின்பகிர்மானம் செய்து சுங்குவார்சத்திரம் பகுதியில் வழங்குவதற்கு பெரிதும் உதவும். ஸ்ரீபெரும்புதூரில் தற்சமயம் உள்ள 400 கி.வோ. துணை மின் நிலையம் மட்டுமே சென்னை மற்றும் புறநகர் பகுதி மின்பகிர்மானத்திற்கு உதவுகிறது. தற்போது இந்த புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படுவதால் ஸ்ரீபெரும்புதூர் 400 கி.வோ துணை மின் நிலையத்தின் பளுகுறைந்து சென்னை, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுங்குவார்சத்திரம் பகுதிகளில் மின் விநியோகம் சீர்பட வழி வகுக்கும்.
இத்துணை மின் நிலையம் 315 எம்.வி.ஏ திறனுள்ள இரண்டு 400/230 கி.வோ மின் மாற்றிகளையும், 200 எம்.வி.ஏ திறனுள்ள இரண்டு 400/110 கி.வோ மின் மாற்றிகளையும் மற்றும் அதற்குண்டான மின் கட்டமைப்புகளையும் கொண்டுள்ளது.
இத்துணை மின்நிலையம் 400 கி.வோ தொடரமைப்பில் 2 ஞ் 600 மெ.வா. வடசென்னை அனல் மின்நிலையம், இரண்டாம் கட்டம் மட்டுமின்றி அலமாதி 400 கி.வோ துணை மின் நிலையம், ஸ்ரீபெரும்புதூர் 400 கி.வோ துணை மின் நிலையம் மற்றும் புதுச்சேரி 400 கி.வோ துணை மின் நிலையம் ஆகியவற்றுடன் இணைக்கப்படும்.
இத்துணை மின் நிலையத்திலிருந்து ஒரகடம், நோக்கியா, ஆரணி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் (மாம்பாக்கம்) 230 கி.வோ துணை மின்நிலையங்களுக்கு மின்சாரம் வழங்கப்படும்.
வடசென்னை அனல் மின் நிலையம் மற்றும் அலமாதி 400 கி.வோ துணை மின் நிலையத்திலிருந்து வரும் மின்தொடரமைப்பு நான்கு வழி சுற்றுப்பாதையாக அமைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மின் தொடர்பாதை அமைப்பதற்கு தேவையான நிலத்தின் அளவு பாதியாக குறையும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தினால் 227.35 கோடி ரூபாய் செலவில் காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள 400 கி.வோ துணை மின் நிலையத்தினை இன்று தலைமை செயலகத்தில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காணொலிக்காட்சி மூலமாக துவக்கி வைத்து தமிழக மக்களுக்கு அர்ப்பணித்தார். இந்த துணை மின் நிலையம் மூலம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்னழுத்தம் சீராக்கப்படுவது மட்டுமன்றி, ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொழில் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்ச்சத்திரத்தில் துணை மின் நிலையத்தினை முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்ததற்காக அப்பகுதியைச் சேர்ந்த சரளா என்பவர் நன்றி தெரிவித்து பேசியதாவது, என் பெயர் சரளா, நான் சிறுமாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவள். நான் கூலி வேலை செய்து வருகிறேன். எங்கள் கிராமத்தில் அடிக்கடி கரண்ட் கட் ஆகிறது. அதனால் எங்கள் குழந்தைகள் படிப்பும், விவசாயமும் பெரிதளவில் பாதிக்கப்படுகிறது. இப்போது எங்கள் கிராமத்தின் அருகில் இந்த துணை மின்நிலையம் அமைக்கப்பட்டதால், எங்கள் குழந்தைகளும், எங்கள் விவசாயமும் பெரிதளவில் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். இனிமேல் சீரான மின்சாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த உதவியை செய்த ஜெயலலிதாவுக்கு எங்கள் கிராமம் சார்பாகவும், எங்கள் பகுதி கிராம மக்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் துணை மின்நிலையத்தினை திறந்துவைத்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:-
அனைவருக்கும் எனது ஆன்பு கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சுங்குவார்த்திரத்தில் 400 கே.வி உள்ள இந்த துணை மின் நிலையத்தை இன்று துவக்கி வைத்ததில் நான் உள்ளபடியே மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இதனால் அந்த பகுதியில் மின் அழுத்தம் சீர் செய்யப்படும் என்று நம்புகிறேன். அப்பகுதி மக்கள் இந்த துணை மின்நிலையத்தால் பயன்பெறுவதோடு அப்பகுதியில் தொழில் வளர்ச்சிக்கும் இது பெரிதும் உதவும் என்ற நம்பிக்கையை தெரிவித்து உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர், தலைமைச்செயலாளர், எரிசக்தித்துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
-
விராட் கோலிக்கு அபராதம்
22 Apr 2024ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
-
நடிகர் ரஜினி பட தலைப்பு அறிவிப்பு
22 Apr 2024சென்னை : ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது.
-
இன்டியா கூட்டணி வென்றால் முழு ஆதரவு வழங்குவோம் : மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு
22 Apr 2024கொல்கத்தா : இன்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்
22 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
-
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்தது
22 Apr 2024பெங்களூரு : கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
-
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
22 Apr 2024புதுடில்லி : பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
-
பெங்களூரு, பஞ்சாப் அணி கேப்டன்களுக்கு அபராதம் : ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை
22 Apr 2024மும்பை : பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ், பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்துள்ளது ஐ.பி.எல். நிர்வாகம்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்