எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.19 - இளைய தொழில் முனைவோர்கள் குறிப்பாக முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு ஊக்கமும், பயிற்சியும் அளிக்கும் வகையில், சிட்கோ நிறுவனத்தை ஆற்றல் மிக்க நிறுவனமாக மாற்ற 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளும் கூடிய வகுப்பறைகள், நூலகம், கணினி மையம், கூட்ட அரங்கம் மற்றும் தங்கும் விடுதி வசதிகளுடன் கூடிய ஒரு நவீன பயிற்சி வளாகம் அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், நிதியமைச்சர் 4.8.11 அன்று பேரவைக்கு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளார் என்று அமைச்சர் சி.சண்முகவேலு தெரிவித்தார்.
நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் சி.சண்முகவேலு பதில் அளித்து பேசியதாவது:-
கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி, அவர்களது பொருளாதார நிலையினை மேம்படுத்தும் பொருட்டு, இத்துறையில் தொழிற் கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. ஜூலை மாதம் 2011 முடிய, இத்துறையில் 347 தொழிற் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2010-2011 ஆம் ஆண்டில் எய்திய விற்பனையைவிட, நடப்பாண்டில் மொத்தம் 700 கோடி ரூபாய் மதிப்பிற்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதனை எய்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நீலகிரி மாவட்ட மக்களுக்கு, வாழ்வாதாரம் அளிக்கும் முக்கிய தொழிலாக, தேயிலை தொழில் விளங்குகிறது. மொத்தம் உள்ள 60 ஆயிரம் சிறு தேயிலை விவசாயிகளில், சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு விவசாயிகள், நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் 15 தேயிலை தொழிற் கூட்டுறவு தொழிற்சாலைகளில், உறுப்பினர்களாக இருந்து பயன்பெற்று வருகின்றனர்.
எப்பொழுதெல்லாம் சந்தையில் தேயிலைத்தூளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து, சிறு தேயிலை விவசாயிகள் துன்பப்படுகிறார்களோ அப்பொழுதெல்லாம் தமிழக முதல்வர் தலைமையிலான அரசு, சிறு தேயிலை விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதற்காக, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
தேயிலை சிறு விவசாயிகளின் துயர் துடைக்கும் பொருட்டு, பசுந்தேயிலைக்கான நியாயமான விலை தொடர்ந்து கிடைக்க வேண்டுமென்ற அடிப்படையில், இந்த ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, பசுந்தேயிலைக்கு 2.8.11 அன்று கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் கூடுதலாக வழங்க, முதல்வர் ஜெயலலிதா தாயுள்ளத்துடன் ஆணையிட்டு, இதற்காக 11.20 கோடி ரூபாய் ஒப்பளித்துள்ளார்கள்.
சேகோசர்வ் எனப்படும் சங்கம் 364 உறுப்பினர்களை கொண்டு, சேலத்தில் இயங்கி வருகிறது. ஜூலை மாதம் 2011 முடிய இச்சங்கமானது 109.66 கோடி ரூபாய் மதிப்பிற்கு விற்பனை செய்து, 110.47 இலட்சம் ரூபாய் இலாபம் அடைந்துள்ளது.
தொழிற் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் குறு, சிறு தொழில் முனைவோர்களுக்கு நிதி வசதி வழங்குவதற்காக, ஏற்படுத்தப்பட்ட தாய்கோ வங்கியானது, தற்பொழுது 44 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. 2010-2011 ஆம் ஆண்டில் பொது மக்களிடமிருந்து ரூ.688.72 கோடி அளவிற்கு வைப்புத் தொகை திரட்டிட ரூ.499.51 கோடி அளவுக்கு பல்வகை கடன்கள் வழங்கியுள்ளது. இவ்வாண்டில் இவ்வங்கி ரூ.248.80 இலட்சம் லாபம் ஈட்டியுள்ளது. இவ்வங்கியின் மூலமாக குறு மற்றும் சிறு தொழில் முனைவோர்கள் தொழில் துவங்குவதற்கு, அதிக கடன் வசதிகள் வழங்க, முதல்வர் ஜெயலலிதா துறை ஆய்வில் அறிவுறுத்தியுள்ளார்.
தற்பொழுது தென்னை நார் நேரடியாக நமது மாநிலத்திலிருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்த மூலப்பொருளை நமது மாநிலத்திலேயே பயன்படுத்தி, மதிப்பு கூட்டப்பட்ட கயிறு பொருட்களின் உற்பத்தியை அதிகரித்து, அதன் மூலம் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு உண்டான திட்டங்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆலோசனைப்படி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களின் முன்னேற்றத்திற்காகவும், தொழில் வளர்ச்சிக்காகவும் ஏற்படுத்தப்பட்ட சிட்கோ நிறுவனம் நவீன முறையில் சீரமைக்கப்பட்டு, தொடர் மேம்பாட்டு நடவடிக்கைகள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் முன்னுரிமை அளித்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏற்கனவே உள்ள 92 தொழிற்பேட்டைகளை தவிர, மேலும் 8 புதிய தொழிற்பேட்டைகளை சிட்கோ நிறுவனமானது தஞ்சாவூரில் பாலயப்பட்டியிலும், வேலூரில் வாணியம்பாடியிலும், விருதுநகரில் மாநகர் புறத்திலும், புதுக்கோட்டையில் மாத்தூரிலும், திருப்பூரில் இராசாத்தவலசுவிலும், விழுப்புரத்தில் வெண்மணி ஆத்தூரிலும், தூத்துக்குடியில் பிடாநேரியிலும், தேனியில் மரிக்குண்டு கிராமத்திலும் புதிய தொழிற்பேட்டைகளை இந்த நிதியாண்டிற்குள் அமைக்க திட்டமிட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா ஆணையின்படி சிட்கோவை புனரமைக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, இதற்கான வழிமுறைகள் ஆராயப்பட்டு, இக்குழுக்களின் பரிந்துரைகளின்படி எளிமையான முறையில் தொழில் முனைவோருக்கு உதவும் நிறுவனமாக சிட்கோவை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிட்கோ தலைமை அலுவலக கட்டிடம் கிண்டி தொழிற்பேட்டையில் புதியதாக கட்ட கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் 2007-ம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக கட்டிடப் பணிகள் தொடக்க நிலையிலேயே உள்ளன. அடுத்த ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்க தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நில ஒதுக்கீட்டிற்கான விலைக் கொள்கை, நில வங்கி உருவாக்குதல், அது தொடர்பான நடைமுறைகளை எளிமையாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் சிட்கோ நிறுவனத்தின் செயல்பாடுகளை சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
டான்சி நிறுவனத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அரசு துறைகளான பள்ளிக்கல்வித்துறை, மின்துறை, போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித்துறை உட்பட அனைத்து துறைகளுக்கும் தேவைப்படும் தளவாட பொருட்களை இந்நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யுமாறு அமைச்சர்களை கேட்டுக் கொள்கிறேன்.
இளைய தொழில் முனைவோர்கள் குறிப்பாக முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு ஊக்கமும், பயிற்சியும் அளிக்கும் வகையில், இந்நிறுவனத்தை ஆற்றல் மிக்க நிறுவனமாக மாற்ற 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளும் கூடிய வகுப்பறைகள், நூலகம், கணினி மையம், கூட்ட அரங்கம் மற்றும் தங்கும் விடுதி வசதிகளுடன் கூடிய ஒரு நவீன பயிற்சி வளாகம் அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், நிதியமைச்சர் 4.8.11 அன்று பேரவைக்கு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் இந்த மாமன்றத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அமைச்சர் சி.சண்முகவேலு பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
போதமலை மலைக் கிராமத்திற்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட இ.வி.எம்.
18 Apr 2024ராசிபுரம், ராசிபுரம் அருகே போதமலை மலைக் கிராம வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்களை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் அதிகாரிகள் சுமந்து
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.