முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி குண்டு வெடிப்பு பலி எண்ணிக்கை உயர்ந்தது

வெள்ளிக்கிழமை, 9 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி. செப். - 9 - டெல்லி ஐகோர்ட்டு  முன்பு நேற்றுமுன்தினம் தீவிரவாதிகள் நடத்திய வெடி குண்டு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. டெல்லி ஐகோர்ட்டின் 5-வது நுழைவாயிலில் சூட்கேசில் வைக்கப்பட்டிருந்த ஒரு சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 11 பேர் பலியானார்கள். மேலும் 70 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் டெல்லி ஜெயப்பிரகாஷ் நாராயண் மற்றும் எய்ம்ஸ் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் பலரது நிலைமை அபாய கட்டத்தில் இருக்கிறது என்று டாக்டர்கள் கூறினர். நேற்று ராம்லோகியா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த 40 வயது நபர் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை மரணம் அடைந்தார்.

இவரையும் சேர்த்து குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்