Idhayam Matrimony

டெல்லி வெடிப்புக்கு பொறுப்பு ஏற்று 3-வது முறையாக இ-மெயில்

சனிக்கிழமை, 10 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.10  - டெல்லி குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று தேசிய புலனாய்வு ஏஜன்சிக்கு 3-வது முறையாக இ-மெயில் வந்துள்ளது. 3-வது இ-மெயிலை இந்திய கொலையாளிகள் என்ற பெயரில் அனுப்பியுள்ளனர். டெல்லியில் ஐகோர்ட்டு முன்பு கடந்த புதன்கிழமை அன்று தீவிரவாதிகள் குண்டுவெடித்தனர். இதில் 13 பேர் பலியாகிவிட்டனர் மற்றும் 70-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு நாங்கள்தான் பொறுப்பு என்று ஹூஜ் தீவிரவாத இயக்கத்தின் மூலம் தேசிய புலனாய்வு ஏஜன்சிக்கு இ மெயில் முதலில் வந்தது. அடுத்து 2-வது முறையாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்துகொண்டு செயல்பட்டு வரும் இந்திய முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பானது டெல்லி குண்டுவெடிப்புக்கு நாங்கள்தான் பொறுப்பு என்று இ-மெயில் அனுப்பியது. தற்போது 3-வது முறையாக இந்திய கொலையாளிகள் என்ற பெயரில் ஒரு பிரிவினர், டெல்லி குண்டுவெடிப்புக்கு நாங்கள்தான் பொறுப்பு என்று தேசிய புலனாய்வு ஏஜன்சிக்கு இ மெயில் வந்துள்ளது. இதில் முதல் இ- மெயில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கிஸ்த்வார் என்ற இடத்தில் இருந்து அனுப்பப்பட்டிருப்பதை தேசிய புலனாய்வு ஏஜன்சி கண்டுபிடித்துள்ளது. இதுதொடர்பாக மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதற்கிடையில் டெல்லியில் கடந்த 7-ம் தேதி நடந்த குண்டுவெடிப்பு குறித்து சரியான தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு ஏஜன்சி தெரிவித்துள்ளது. மேலும் நேற்று தேசிய புலனாய்வு ஏஜன்சி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா ஆகிய மாநிலங்களின் தீவிரவாத எதிர்ப்பு பிரிவு போலீஸ் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்