எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, செப்.- 14 - குஜராத்தில் கடந்த 2002 ம் ஆண்டு நடந்த கலவர வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அடுத்து முதல்வர் நரேந்திர மோடியை தேசிய அரசியலுக்கு கொண்டுவர பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. அவரை பா.ஜ.க. தலைவராக்கவும் முயற்சிகள் நடந்துவருவதாக தெரிகிறது. குஜராத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின்னர் அம்மாநிலத்தில் கலவரம் வெடித்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தை ஆரம்பத்திலேயே மோடி கட்டுப்படுத்தாததால்தான் இந்த அளவுக்கு உயிர்ப்பலி நடந்ததாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் ராகவன் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது. அந்த குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் முதல்வர் மோடி மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் அளவுக்கு ஆதாரங்கள் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத்தில் குல்பர்க் சொசைட்டியில் நடந்த பயங்கர வன்முறையில் 69 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த படுகொலை சம்பவத்தில் நரேந்திரமோடிக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரிக்க மூத்த வழக்கறிஞர் ராஜுராமச்சந்திரனுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ராமச்சந்திரன் விசாரித்து அறிக்கையை சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில் மோடிக்கு வன்முறையில் தொடர்பில்லை என்று சிறப்பு விசாரணை குழு கூறிய கருத்தை அவர் வன்மையாக கண்டித்துள்ளதாக தெரிகிறது. மேலும் ராமச்சந்திரன் அறிக்கை மீது சுப்ரீம் கோர்ட்டு தனது உத்தரவை பிறப்பித்தது. நீதிபதிகள் ஜெயின், சதாசவம், அப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் டிவிசன் பெஞ்ச் அளித்துள்ள தீர்ப்பில் சிறப்பு விசாரணை குழு தனது இறுதி விசாரணை அறிக்கையை அகமதாபாத் கீழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும், இதை கீழ்கோர்ட் மாஜிஸ்திரேட் விசாரித்து முதல்வர் நரேந்திரமோடியையும் விசாரிக்க வேண்டுமா? அல்லது குல்பர்க் சொசைட்டி எரிக்கப்பட்டதில் பலியான காங்கிரஸ் எம்.பி.யின் மனைவி ஷாகியா ஜாப்ரின் வழக்கை முடித்துவிட வேண்டுமா? என்பதை முடிவு செய்ய வேண்டும். மோடிக்கு எதிரான வழக்கை முடித்துக்கொள்ள மாஜிஸ்திரேட் நினைத்தால் இஸன் ஜாப்ரியின் விதவை மனைவியை அழைத்து அவர் கருத்தை கேட்க வேண்டும். இந்த வழக்கை இனியும் நாங்கள் தொடர்ந்து மேற்பார்வையிட வேண்டிய அவசியம் இருப்பதாக கருதவில்லை என்று கூறிவிட்டனர்.
இதனையடுத்து இந்த விவகாரத்தில் முதல்வர் மோடி நிம்மதி அடைந்துள்ளார். சுப்ரீம் கோர்ட் உத்தரவின் மூலம் மோடிக்கு தேசிய அரசியலில் ஈடுபடுவதற்கு இருந்த தடை விலகிவிட்டதாக பா.ஜ.க. கருதுகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அவரை கட்சியின் தலைவராக்கிவிட அவரது ஆதரவாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். தற்போதைய பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரியின் 3 ஆண்டு பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால் மோடியை தலைவராக்கி அவரை முழு அளவில் தேசிய அரசியலில் ஈடுபடுத்த பா.ஜ.க.வின் ஒரு பிரிவினர் திட்டமிட்டுள்ளனர்.
அருண்ஜெட்லி உள்ளிட்ட சில மூத்த பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத் ஆகியவற்றின் ஆதரவு நரேந்திரமோடிக்கு உள்ளது. அதேசமயத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலில் தன்னை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்திக்கொள்ளும் வகையில் எல்.கே.அத்வானி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ரதயாத்திரையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.