முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாயாவதிக்கும் கிரிமினல்களுக்கும் தொடர்பு இருக்கிறது: சி.பி.ஐ.

வியாழக்கிழமை, 15 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,செப்.- 15 - முதல்வர் மாயாவதிக்கும் கிரிமினல்களுக்கும் இடையே தொடர்பு இருக்கிறது. அதனால் அவர் மீது தொடரப்பட்டுள்ள சொத்துக்குவிப்பு வழக்கை முடிவுக்கு கொண்டுவரக்கூடாது என்று சுப்ரீம்கோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் மாயாவதி தலைமையில் பகுஜன்சமாஜ் கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வர் மாயாவதி மீது முறைகேடான வழிகளில் சொத்து குவித்திருப்பதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை சுப்ரீம்கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று முதல்வர் மாயாவதி சார்பாக சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அது தொடர்பாக மாயாவதி தாக்கல் செய்துள்ள மனுவில், தமக்கு உள்ள் சொத்து குறித்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதை வருமான வரித்துறையினர் ஏற்றுக்கொண்டுவிட்டனர். அதனால் வழக்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் புதிய வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் முதல்வர் மாயாவதி மற்றும் அவரது உறவினர்களுக்கு கிரிமினல்களுடன் தொடர்பு இருக்கிறது. அதனால் வருமானவரித்துறையின் மதிப்பீடு அடிப்படையில் வழக்கை முடிக்கக்கூடாது என்று கூறப்பட்டது. மாயாவதி,அவரது உறவினர்கள் சொத்து சேர்த்திருப்பதற்கும் அதுதொடர்பாக அவர்களுக்கு கிரிமினல்களுடன் தொடர்பு இருப்பதற்கும் தஸ்தாவேஜு மற்றும் சாட்சியங்கள் மூலம் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன என்றும் சி.பி. ஐ. சார்பாக நேற்று சுப்ரீம்கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
மாயாவதி அளவுக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனால் வருமானவரித்துறை கோர்ட்டில் மாயாவதியின் சொத்து மதிப்பு சரிதான் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனையொட்டி இந்த வழக்கு முடிக்க வேண்டும் என்று மாயாவதி,சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு சி.பி.ஐ. சார்பாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்