முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹூப்ளி விமானத்தை கடத்த தீவிரவாதிகள் திட்டம்

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

பெங்களூர்,செப்.- 27 - கர்நாடக மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள முக்கிய நகரமான ஹூப்ளியில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரித்தது. அந்த தீவிரவாதிகள் ஹூப்ளியில் உள்ள விமான நிலையத்தில் இருந்து தனியார் விமானம் ஒன்றை கடத்திச் செல்ல திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை தெரிவித்தது. தீவிரவாதிகள் ஹூப்ளி விமான நிலையத்தை தகர்க்கவும் செய்யலாம் என்று உளவுத்துறை குறிப்பில் தகவல் இடம் பெற்றிருந்தது. இந்த தகவலை மத்திய உள்துறை ஹூப்ளி போலீசாருக்கு தெரிவித்து உஷார் படுத்தியது. இதையடுத்து நேற்றுமுன்தினம் ஹூப்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலையத்தின்  பாதுகாப்பு 3 மடங்கு அதிகரிக்கப்பட்டது. அதிரடிப்படை வீரர்களும் ஹூப்ளி விமானநிலையத்துக்கு வரவழைக்கப்பட்டனர். வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்யும் நிபுணர்கள், ஹூப்ளி விமான நிலையம் முழுவதும் சோதனை நடத்தினார்கள். விமான நிலையத்துக்குள் வந்த எல்லாவானங்களும் கடுமையாக சோதிக்கப்பட்டன. விமான நிலைய ஊழியர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் மக்களிடம் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்