முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன்

சனிக்கிழமை, 8 அக்டோபர் 2011      சினிமா
Image Unavailable

பெங்களூர்,அக்.8 - கன்னட நடிகர் தனது மனைவி விஜயலெட்சுமியை தாக்கிய வழக்கில் போலீசார் கைது செய்து பெங்களூர் அக்ராகாரா சிறையில் அடைக்கப்பட்டார்.  மேற்கூறிய வழக்கில் தன்னை  ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி பெங்களூர் குற்றவியல் நீதிமன்றம் மற்றும் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தர்ஷன் தாக்கல்செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து கர்நாடாக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். கடந்த செவ்வாய்க்கிழமை நீதிபதி பிண்டோ முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. அதை ஏற்று விசாரணையை நேற்று நீதிபதி ஒத்தி வைத்தார். அதன்படி இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தர்ஷனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்