முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவாகரத்து கோரி நடிகை கோர்ட்டில் வனிதா மனு

வியாழக்கிழமை, 13 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.- 13 - இரண்டாவது கணவரிடம் விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகை வனிதா மனு தாக்கல் செய்துள்ளார். பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இவரது 2-வது கணவர் ராஜன் ஆனந்த். இவர்களுக்கு கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் வனிதாவும் ராஜன் ஆனந்த்தும் பரஸ்பர முறையில் விவாகரத்து கேட்டு சென்னை முதன்மை குடும்ப நல கோர்டில் மனு தாக்கல் செய்தனர். கடந்த 1.8.2011 முதல் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் எனவே இருவருக்கும் பரஸ்பர முறையில் விவாகரத்து வழங்க வேண்டும் என்று நீதிபதி ராஜா சொக்கலிங்கத்திடம் இருவரும் நேரில் ஆஜராகி மனு தாக்கல் செய்தனர். நடிகை வனிதா ஏற்கனவே டி.வி.நடிகரான ஆகாஷை திருமணம் செய்தவர். அவர்களுக்கு ஹரி என்ற மகன் இருக்கிறான். தனது மகனை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வனிதா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையே ஆகாஷிற்கும் வனிதாவிற்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ சம்மதித்தனர். இந்த சூழ்நிலையில் 2-வது கணவரிடம் இருந்து வனிதா விவாகரத்து கேட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்