முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது ஒரு நாள் போட்டி: இந்திய அணி அபார வெற்றி

செவ்வாய்க்கிழமை, 18 அக்டோபர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, அக். 18 - இங்கிலாந்து அணிக்கு எதிராக புதுடெல்லியில் நடைபெற்ற 2 -வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியா சத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடரில் 2 - 0 என்ற கணக்கில் அசைக்க முடியாத முன்னிலை பெற்று உள்ளது. இது இந்திய அணிக்கு தொடர்ந்த 2 -வது வெற்றியாகும். இந்தப் போட்டியில் விராட் கோக்லி சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப் பம்சமாகும். கெளதம் காம்பீர் அவருக்கு பக்கபலமாக ஆடினார். இரு வரும் நிலைத்து நின்று ஆடி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 -வது ஒரு நாள் போட்டி புதுடெல்லியில் உள்ள பெரோசா கோட்லா மை தானத்தில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடந்தது. 

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இறுதியில் 48.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 237 ரன்னை எடுத்தது. சமித் படே ல் 42 ரன்னையும், பொபாரா 36 ரன்னையும், பேர்ஸ்டோ 35 ரன்னையும், டிராட் 34 ரன்னையும் எடுத்தனர். 

பின்பு ஆடிய இந்திய அணி 36.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்னை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோக் லி 112 ரன்னையும், காம்பீர் 84 ரன்னையும் எடுத்து இறுதிவரை ஆட்ட ம் இழக்காமல் இருந்தனர். கோக்லி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப் பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்