முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மும்பையில் பலப்பரிட்சை

ஞாயிற்றுக்கிழமை, 23 அக்டோபர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, அக். 23 - இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 - வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று நடக்க இருக்கிறது. இந்த ஆட்டத்திலும் இந்திய அணியின் வெற்றி தொடருமா என்ற கேள் வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.  கேப்டன் அலிஸ்டார் குக் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தி யாவில் சுற்றுப் பயணம் செய்து கேப்டன் தோனி தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடர் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே 3 போட்டிகள் முடிவடைந்து விட்டன. இந்த 3 ஆட்டத்திலும் இந் திய அணி வெற்றி பெற்று 3 - 0 என்ற கணக்கில் தொடரை வென்றது. 

இந்த நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடை யேயான 4 -வது ஒரு நாள் போட்டி மும்பையில் உள்ள வாங்க்டே மைதானத்தில் இன்று பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. 

இந்திய அணி முதல் 3 ஆட்டத்திலும் தொடர்ந்து வெற்றி பெற்றதால் இந்திய வீரர்கள் முழு உத்வேகத்துடன் இந்தப் போட்டியில் களம் இற ங்குகின்றனர். 4 - வது போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளனர். 

அதே நேரம், இங்கிலாந்து அணி முதல் 3 ஆட்டத்திலும் தொடர்ந்து தோல்வி அடைந்ததால் இந்தப் போட்டியில் எப்படியாவது ஆறுதல் வெற்றியாவது பெற்று விட வேண்டும் என்ற ஆவேசத்தில் களம் இற ங்குகிறது. 

இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்த போ து, அங்கு நடந்த ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியாமல் ஏமாற்றத்துடன் நாடு திரும்பியது. 

இந்த நிலையில் இங்கிலாந்து அணி தற்போது இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா தனது சொந்த மண் ணில் தொடர்ந்து வெற்றி பெற்று இங்கிலாந்தை பழி தீர்த்துக் கொண்டது. 

இந்திய அணியில் முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விளையாட வில்லை. அவர்களுக்குப் பதிலாக இளம் வீரர்கள் களத்தில் இறக்கப்ப ட்டனர். அவர்களுக்கு முன் இங்கிலாந்து வீரர்களின் பந்து வீச்சும், பீல் டிங்கும் எடுபடவில்லை. 

தொடக்க ஆட்டக்காரர்கள் ரகானேவும், காம்பீரும் நல்ல நிலையில் உள்ளனர். அவர்கள் சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறார்கள். 

இதனால் எதிர் அணி எந்த இலக்கை நிர்ணயித்தாலும் அதனை எட்டி வெற்றி பெறும் வகையில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. இந்திய வீரர்கள் தற்போது நல்ல தன்னம்பிக்கையுடன் காணப்படுகிறார்கள். 

மும்பை போட்டியின் மூலம் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 80 -வது முறையாக மோத உள்ளன. இதுவரை நடத்த 79 ஆட்டத்தில், இந்தியா 41 போட்டியிலும், இங்கிலாந்து 33 போட்டியிலும் வெற்றி பெற்று உள்ளன. 2 ஆட்டம் டை ஆனது. 2 ஆட்டம் முடிவு இல்லை. 

இந்திய அணி : - தோனி (கேப்டன்), ரகானே, பார்த்திவ் படேல், கா ம்பீர், விராட் கோக்லி, ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், பிரவீ ன் குமார், வினய் குமார், மிதுன், மனோஜ் திவாரி, வருண் ஆரோன், அரவிந்த், மற்றும் ராகுல் சர்மா ஆகியோர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்