எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா, அக்.- 31 - டுவெண்டி - 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியதற்கு பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டமே காரணம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி குற்றம் சாட்டியுள்ளார். இந்திய - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 5 ஒரு நாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி அனைத்து போட்டிகளிலும் தோற்று தொடரை பரிதாபமாக இழந்தது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டுவெண்டி - 20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. ஈடன் கார்டனில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணிக்கு கெவின் பீட்டர்சன் தலைமை வகித்தார். இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரகானேவும், ராபின் உத்தப்பாவும் களமிறங்கினர். இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. முதல் ஓவரில் ரகானே ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஃபின் பந்தில் அவுட்டானார். அடுத்த பிரேஸ்னன் ஓவரில் 1 ரன் மட்டுமே எடுத்த உத்தப்பா விக்கெட் கீப்பரால் பிடிக்கப்பட்டு அதிர்ச்சியளித்தார். அடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் சுரேஷ் ரெய்னா ஜோடி மெதுவாக ரன்களை சேர்த்தது. இந்த ஜோடியிலும் கோலி 15 ரன்களை மட்டுமே எடுத்து பிரேஸ்னன் பந்தில் அவுட்டானார். அடுத்து மனோஜ் திவாரி, ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்தார். திவாரியும் 15 ரன்களை மட்டுமே எடுத்து பட்டேல் பந்தில் போல்டானார். நம்பிக்கையாக விளையாடிவந்த ரெய்னாவும் 39 ரன்களை எடுத்த நிலையில் ஃபின் பந்தில் பரிஸ்டோவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். திவாரி மற்றும் ரெய்னா ஆகியோர் இந்திய அணி மொத்த ரன்கள் 74 ஆக இருக்கும்போதே அவுட்டானது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ரவீந்திர ஜடேஜா ரன் எதுவும் எடுக்காமலும், யூசுப் பதான் 10 ரன்களிலும், குமார் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டானார்கள். இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்களை மட்டுமே எடுத்தது. அஸ்வின் 17 ரன்களுடனும், வினய்குமார் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஃபின் 3 விக்கெட்டுகளையும், பிரேஸ்னன் மற்றும் ரவி பொப்பாரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், பட்டேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் கால்ஸ் மற்றும் கீய்ஸ்வெட்டர் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆனாலும் அடுத்து களமிறங்கிய பீட்டர்சன் அபாரமாக விளையாடினார். இதனால் இங்கிலாந்து அணியின் வெற்றி எளிதானது. பட்டேல் 21 ரன்களையும், பொப்பாரா 14 ரன்களையும் எடுத்தனர். இதனால் இங்கிலாந்து அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் பதான், கோலி, ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதனால் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, ஒரே ஒரு போட்டியைக் கொண்ட இந்த டுவெண்டி - 20 போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்த கேப்டன் மகேந்திரசிங் தோனி, பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டமே இந்த தோல்விக்கு காரணம் என்று குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், இந்திய வீரர்கள் ரன் எடுக்க தடுமாறினார்கள். மேலும் சரியான பார்ட்னர்ஷிப்பே அமையவில்லை என்றும் தெரிவித்தார். 120 ரன்கள் என்பது மிக எளிதான ரன். இந்த மைதானத்தில் 170 அல்லது 160 எடுக்க முடியும் என்று நான் கூறவில்லை. ஆனால் அதே நேரத்தில் ஒரு 140 ரன்களையாவது எடுத்திருக்க வேண்டும். மேலும் பீல்டிங்கில் செய்த சில தவறுகளும் இதற்கு காரணமாகிவிட்டது. பீட்டர்சன் தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி வெற்றியை உறுதி செய்தார். எங்களுக்கு துவக்கம் சிறப்பாக அமையவில்லை. 8 பேட்ஸ்மேன்களுடன் விளையாடியும் எங்களால் போதுமான ரன்களை குவிக்க முடியாமல் போனது கவலைக்குரியது. இதுபோன்ற போட்டிகளில் வீரர்கள் கடைசிவரை சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். எங்களுக்கும் அவர்களுக்கும் இதில் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் மிகச் சிறப்பாக இருந்தது என்றும் தோனி தெரிவித்தார். மந்தமான இந்த ஆடுகளத்தை பீட்டர்சன் நன்கு கணித்து ஆடியதால் அவர்கள் வெற்றியை தட்டிச்சென்றனர் என்றும் தெரிவித்தார். அடுத்த மாதம் நடைபெற இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடருக்கு இளம் வீரர்களை தேர்வாளர்கள் தேர்வு செய்தால் நன்றாக இருக்கும் என்றும் தோனி தெரிவித்தார். ஆனால் டெஸ்ட் போட்டித் தொடர் ஒரு நாள் போட்டிகள் போன்றதில்லை. ஆடுகளத்தில் நீண்ட நேரம் நின்று விளையாட வேண்டும் என்ற எண்ணத்துடன் வீரர்கள் களமிறங்க வேண்டும் என்றும் தோனி ஆலோசனை தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.