முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அத்வானி வர இருந்த பாலத்தில் குண்டு வைத்த 2 பேர் கைது

புதன்கிழமை, 2 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,நவ.2 - அத்வானி வர இருந்த பாலத்தில் குண்டு வைத்த மதுரை வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் துருவி,துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணைபிரதமருமான எல்.கே.அத்வானி ஊழலை எதிர்த்தும், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கபட்டுள்ள பணத்தை மீட்க வலியுறுத்தியும் மக்கள் விழிப்புணர்வு ரத யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். நாடு முழுவதும் வலம் வரும் இந்த யாத்திரை தமிழகம் வந்தது. மதுரையில் கடந்த 27 ம் தேதி

 நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு அத்வானி ரதத்தில் திருமங்கலம் வழியாக செல்வதாக இருந்தது. அவர் செல்லும் பாதையான திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி தரைப்பாலத்தின் கீழ் பைப் வெடி குண்டு வைக்கப்பட்டிருந்தது. அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து குண்டை கைப்பற்றி செயலிழக்க செய்தனர். இதை தொடர்ந்து அத்வானி செல்லும் பாதை மாற்றி அமைக்கப்பட்டு வேறு பாதையில் சென்றார்.

  இது குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது. தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜார்ஜ், சிபிசிஐடி கூடுதல் டிஜிபி சேகர் ஆகியோர் திருமங்கலம் வந்து, குண்டு வைக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு நேரில் விசாரணை மேற்கொண்டனர். கூடுதல் டிஜிபிக்கள் ஜார்ஜ், சேகரின் ஆகியோரின் உத்தரவின் பேரில் தமிழக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார்  இந்த வழக்கில் மதுரை சிம்மக்கல்லை சேர்ந்த இஸ்மத், நெல்பேட்டையை சேர்ந்த அப்துல் ரகுமான் ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து துருவி, துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்களா? வேறு எங்கும் குண்டு வைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளதா என்றும் விசாரணை நடந்து வருகிறது. கைது செய்யப்பட்ட இஸ்மத், அப்துல்ரகுமான் கொடுக்கும் வாக்குமூலத்தில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்