முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கத்தார் சிறையில் இருந்த தமிழ் மீனாவர்கள் விடுதலை

புதன்கிழமை, 2 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

நாகர்கோவில்.நவ.2- மீன் பிடிக்க சென்றபோது எல்லை தாண்டியதாக கைது செய்து செய்யப்பட்டு கத்தார் சிறையில் 4 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி குமரி மாவட்டம் சின்னமுட்டம் ஆன்டனி செபஸ்டியன், சூசைராஜ், ஜேசுபுத்திரன், மற்றும் ராம்நாட்டை சேர்ந்த பாலு ஆகிய 4 பேரும் பக்ரைன் நாட்டில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது அவர்கள் சென்ற கத்தார் நாட்டு கடல் எல்லையை தாண்டியதாக கூறி அந்நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருந்தவர்களை விடுவிக்ககோரி மத்திய அரசு கத்தார் அரசிடம் கேட்டுக்கொண்டதன் பேரில் அந்த நான்கு பேரும் விடுக்கப்பட்டனர்.

வழக்கு நடத்த தேவையான பணம், வழக்கறிஞர் கட்டணம், நாடு திரும்ப தேவையான பணம் ஆகியவை உட்பட ரூ.49 லட்சத்தை தமிழக அரசு ஒதுக்கியது . ஆனால், அந்த தொகையை மத்திய அரசு தரவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் உடனிருந்த மற்ற மீனவர்களிடம் கடன் வாங்கி சிறையில் இருந்து வெளிவந்தனர்.

எனவே, தமிழ் நாடு திரும்பி உள்ள மீனவர்களின் கடன் தொகையை திரும்ப செலுத்தும் வகையில் ரூ.49 லட்சத்தை மத்திய அரசு உடனடியாக கத்தார் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பி வைக்குமாறு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago