முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலிபான் தீவிரவாதிகள் தாக்குதலில் 5 பாக். ராணுவத்தினர் பலி

திங்கட்கிழமை, 7 நவம்பர் 2011      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், நவ.- 7 - பாகிஸ்தானின் வடக்கு வஜ்ரிஸ்தான் பகுதியில் ராணுவ வாகனங்கள் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ளது வஜ்ரிஸ்தான். இந்த பகுதி தீவிரவாதிகளின் புகலிடமாக திகழ்ந்துவருகிறது. பழங்குடி இன மக்கள் அதிகமாக வசிக்கும் வஜ்ரிஸ்தான் பிராந்தியத்தில் முக்கியமான நகரமாக இருப்பது மீரான்ஷா. இந்த நகரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள ரஸ்மாக் என்ற இடத்தில் பாகிஸ்தான் ராணுவ வாகனங்கள் தீவிரவாதிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தன. அப்போது அந்த வாகனங்கள் மீது ராக்கெட் வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள், தானியங்கி ஆயுதங்கள் ஆகியவற்றின் மூலம் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் குறைந்தபட்சம் 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியானார்கள். மேலும் 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். ஆனால் 12 ராணுவ வீரர்கள் பலியானதாக பாகிஸ்தான் ஊடக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அவற்றை பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மறுத்துள்ளனர். இந்த தாக்குதலை பாகிஸ்தானி தலிபான் தீவிரவாதிகள்தான் நடத்தியுள்ளனர் என்றும், இவர்கள் சங்காரா என்ற இடத்தில் இருந்து இயங்கி வருவதாகவும் ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த தாக்குதலைத் தொடர்ந்து வஜ்ரிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தலிபான்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். அத்தகைய நடவடிக்கையின்போதுதான் தலிபான் தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்