முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓமனில் கப்பல் மூழ்கி 5 இந்தியர்கள் பலி

செவ்வாய்க்கிழமை, 8 நவம்பர் 2011      உலகம்
Image Unavailable

துபாய், நவ. - 8 - தென்மேற்கு ஆசிய நாடான ஓமன் கடல் பகுதியில் இந்திய கப்பல் ஒன்று கடலில் மூழ்கியது. அதில் பயணம் செய்த 5 இந்தியர்கள் உயிரிழந்தனர்.  எம்.எஸ்.வி. சிவசாகர் என்ற அந்த கப்பல் குஜராத்தில் இருந்து துபாய்க்கு சென்று கொண்டிருந்தது. தெற்கு ஓமன் கடல் பகுதியில் கப்பல் சென்று கொண்டிருந்த போது பெரும் புயல் வீசியது. இதில் சிக்கிய கப்பல் கடலில் மூழ்கியது. இதையறிந்த ஓமன் கடற்படையினர் அப்பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 6 பேரை மட்டும் மீட்க முடிந்தது. 5 பேர் உயிரிழந்தனர். கப்பல் கேப்டன் உள்பட 9 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்