முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி டெஸ்ட் போட்டியில் மனநெருக்கடி இல்லாமல் ஆடியதால் சாதித்தேன் - தமிழக வீரர் அஸ்வின்

வியாழக்கிழமை, 10 நவம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, நவ. - 10  -  மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக டெல்லியில் நடந்த முதலா வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் மன நெருக்கடி இல்லாமல் ஆடி யதால் சாதித்தேன் என்று இந்திய அணியில் முதன் முறையாக இடம் பிடித்த அஸ்வின் தெரிவித்தார். இது பற்றிய விபரம் வருமாறு -  இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயா  ன முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள பெ ரோசா கோட்லா மைதானத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்றது.  இந்தப் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் சிறப்பாக பந்து வீசினார். அவர் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டும், 2 வது இன்னிங்சில் 6 விக்கெ ட்டும் சேர்த்து மொத்தம் 9 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத் தார்.  இது மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பின்னடைவுக்கு காரணமாக இருந்தது. டெல்லியில் நடந்த இந்த முதலாவது டெஸ்ட் போட்டி குறி த்து தமிழக வீரர் அஸ்வின் நிருபர்களிடம் தெரிவித்ததாவது - முன்னதாக இந்தப் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்த முடியும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் 9 விக்கெட் வீழ்த்தியது எனக்கு நம்ப முடி யாத ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.  டெல்லி ஆடுகளத்தில் இவ்வளவு விக்கெட்டுகளை வீழ்த்தியது என் னால் நம்ப முடியாத அளவுககு உள்ளது. நான் ரஞ்சி கோப்பையில் ஆடியது எனக்கு இந்தப் போட்டியில் கைகொடுத்தது. அதில் ஏற்பட்ட அனுபவத்தால் தான் இந்தப் போட்டியிலும் நன்றாக ஆடியிருக்கிறேன் என்று கருதுகிறேன். ரஞ்சி போட்டி என்னை சிறந்த டெஸ்ட் போட்டி பந்து வீச்சாளராக மாற்றியுள்ளது.  முதல் போட்டியிலேயே நன்றாக ஆடியது என்னை மிகவும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இந்த போட்டியை பொறுத்தவரை, நான் எந்த விதமான நெருக்கடிக்கும் இடம் கொடுக்காமல் ஆடினேன்.  இந்தப் போட்டியில் மே.இ.தீவு அணியின் மூத்த வீரரான சந்தர்பால் விக்கெட்டை வீழ்த்தியது எனக்கு முக்கிய சாதனையாக தெரிகிறது. அவர் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தார். எனவே அவரை வீழ்த்துவத ற்கு வேறுவித நுணுக்கத்தை கையாண்டேன். அது அதிர்ஷ்டவசமாக கைகொடுத்தது.  நான் நன்றாக பந்து வீசுவதற்கு டெண்டுல்கரும், டிராவிட்டும் உற்சாக ப்படுத்திக் கொண்டிருந்தனர். அது எனக்கு மிகவும் உதவியாக இருந்த து. இவ்வாறு அறிமுக வீரரான அஸ்வின் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்