எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அட்டூ(மாலத்தீவு), நவ.11 - மும்பை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் ஒரு பயங்கரவாதி. அவனை கண்டிப்பாக தூக்கில் போட வேண்டும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக்கே தெரிவித்து இருக்கிறார். அவனை கழுமரத்தில் ஏற்றியே தீர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுப்பதிலும் சரி, அவர்களுக்கு புகலிடம் அளிப்பதிலும் சரி, பாகிஸ்தானுக்கு நிகராக வேறு எந்த நாடும் இருக்க முடியாது என்பது பரவலான கருத்து. காரணம், அமெரிக்காவால் தேடப்பட்ட சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் அங்குதான் ஒளிந்திருந்தான். அவனை தேடி கண்டுபிடித்து அவனுடைய சரித்திரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது அமெரிக்கா. இதே போல் மும்பை குண்டு வெடிப்பு தொடர்பாக தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராகிமும் பாகிஸ்தானில்தான் ஒளிந்திருக்கிறான். இதை பாகிஸ்தான் இன்றும் மறுத்தாலும் கூட அதுதான் மறுக்க முடியாத உண்மை. அப்படிப்பட்ட பாகிஸ்தானே அஜ்மல் கசாப்பை தூக்கில் போட வேண்டும் என்று தற்போது கருத்து சொல்லியிருக்கிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னால் மகராஷ்டிரா மாநிலம் மும்பை நகருக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அதிரடியாக புகுந்து அங்குள்ள தாஜ் ஓட்டல், ஓபராய் ஓட்டல் மற்றும் நாரிமன் ஹவுஸ் உள்ளிட்ட பல இடங்களில் தாக்குதல் நடத்தினார்கள். இந்த கொடூரமான தாக்குதலில் அப்பாவி மக்கள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் இளைஞர்கள் உட்பட கிட்டத்தட்ட 168 பேர் அப்போது பலியானார்கள். இந்த தீவிரவாதிகளின் தாக்குதல் பற்றி தகவல் அறிந்ததும் உடனடியாக அங்கு கமாண்டோ படையினரும், பாதுகாப்பு படையினரும், போலீசாரும் விரைந்து சென்று பயங்கரவாதிகளுடன் பயங்கர சண்டையில் ஈடுபட்டனர். இதில் 9 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டனர். ஒரே ஒரு தீவிரவாதி மட்டும் உயிரோடு பிடிபட்டான். அவன்தான் அஜ்மல் கசாப். இவன் பாகிஸ்தானை சேர்ந்தவன்.
இவன் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. பிறகு நீதிமன்றம் இவனுக்கு தூக்குத் தண்டனை அளித்தது. ஆனாலும் இன்னமும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. அஜ்மல் கசாப்பை தூக்கில் போடக் கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியும் கூட அவன் இன்னமும் தூக்கில் போடப்படவில்லை. இதே போல பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குருவையும் தூக்கில் போட மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. இந்த நிலையில் மாலத்தீவில் நேற்று சார்க் நாடுகளின் உச்சி மாநாடு தொடங்கியது.
இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கும், பாகிஸ்தான் பிரதமர் கிலானியும் கலந்து கொண்டனர். இதே போல் சார்க் நாடுகளின் தலைவர்களும் அங்கு குவிந்துள்ளனர். சார்க் மாநாட்டையொட்டி அங்கு சென்ற இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அங்கு பாகிஸ்தான் பிரதமர் கிலானியை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்து பேச்சு நடத்தினார். முன்னதாக, இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக், பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர்,
அஜ்மல் கசாப் ஒரு பயங்கரவாதி. அவனை கண்டிப்பாக தூக்கில் போட வேண்டும். அவனை கழுமரத்தில் ஏற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கூறினார். அவர் மேலும் கூறுகையில், இந்தியாவுக்கு நீதித்துறை கமிஷன் ஒன்று செல்லவிருக்கிறது. இது மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையை துரிதமாக முடிக்க உதவும் என்றும் தெரிவித்தார். இந்த கமிஷன் இந்தியாவில் எத்தனை நாட்கள் தங்கும்? என்று கேட்ட போது, நீதித்துறை கமிஷனானது இந்தியாவில் மூன்று அல்லது நான்கு நாட்கள் இருக்கும் என்று தெரிவித்தார். எப்போது விசாரணை பூர்த்தியாகும் என்று கேட்ட போது, இப்போதுதான் நடைமுறை தொடங்கவிருக்கிறது. அதற்குள் எப்போது முடியும் என்ற கேள்விக்கு பதில் அளிக்க முடியாது என்று மாலிக் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் ஒரு உறுதியான ஆதாரங்கள் தேவைப்படுகிறது என்றும் ரகுமான் மாலிக் தெரிவித்தார். மேலும் தனது நாட்டில் ஒசாமா பின்லேடன் பதுங்கி இருந்தது தங்கள் நாட்டுக்கு தெரியாது என்றும் மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர் மழுப்பலாக தெரிவித்தார். இருப்பினும், ஒசாமா பின்லேடன் சி.ஐ.ஏ., ஐ.எஸ்.ஐ. போன்ற அமைப்புகளால் பயிற்சி பெற்றவன். அவனுக்கு எப்படி ஒளிவது என்று நன்றாகத் தெரியும் என்றும் மாலிக் குறிப்பிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.