முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்மேற்கு சீன சுரங்க விபத்தில் 20 பேர் பரிதாப பலி

சனிக்கிழமை, 12 நவம்பர் 2011      உலகம்
Image Unavailable

பெய்ஜிங், நவ.- 12 - தென்மேற்கு சீனாவில் உள்ள ஒரு நிலக்கரிச் சுரங்க விபத்தில் சிக்கி 20 பேர் பரிதாபமாக பலியானார்கள். சீனாவின் தென்மேற்கில் உள்ள யுனான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலக்கரிச் சுரங்க விபத்தில் 20 பரிதாபமாக பலியானார்கள். இந்த விபத்தில் சுரங்க இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் 24 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிஷுவாங் நிலக்கரிச் சுரங்கத்தில் இந்த விபத்து கடந்த வியாழக்கிழமை நடந்ததாக மாகாணத்தின் பேரிடர் பொறுப்பு அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த நிலக்கரிச் சுரங்கத்தினுள் எரிவாயு தீப்பிடித்து இவ்விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சுரங்கத்தில் மொத்தம் எத்தனைபேர் வேலை செய்தார்கள் என்ற விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை. புதையுண்டவர்களை மீட்கும் பணியில் 100 க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஏராளமான மருத்துவர்களும், ஆம்புலன்சுகளும் அங்கு விரைந்துள்ளன என்று சின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்