முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கம்புலி பட திருட்டு டி.வி.டி - நடிகர் ஜீவா-டைரக்டர் புகார்

புதன்கிழமை, 9 மார்ச் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, மார்ச், 10 - சிங்கம்புலி பட திருட்டு விசிடி, டிவிடி விற்பனையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவும் கோரி நடிகர் ஜீவா, டைரக்டர் சாய்ரமணி ஆகியோர் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் அளித்தனர். சென்னை மற்றும் தமிழகமெங்கும் சில்வர் லைன் பிலிம் பேக்டரி சார்பில் சிங்கம்புலி திரைப்படம் தயாரிக்கப்பட்டு ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்த படத்தின் டி.வி.டிக்கள் திருட்டுத்தனமாக தயாரிக்கப்பட்டு  விற்பனை செய்யப்பட்டு வருவதால் தங்களது பட வசூல் பாதிக்கப்படுகிறது என்று அதன் டைரக்டர் சாய்ரமணி, நடிகர் ஜீவா ஆகிஓயர் நேற்று காலை 10.30 மணி அளவில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அங்கு கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் அளித்தனர் அந்த புகாரில் மார்ச் 4-ம் தேதி முதல் சிங்கம்புலி படம் சிறப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. 

இந்நிலையில் படத்தின் வியாபாரத்தை தடுக்கும் பொறுட்டு திருட்டி சிடி விற்கும் சதிகாரர்கள் இப்படத்தின் சி.டி.க்களை கோவில் வாசங்களையும், பள்ளி கல்லூரிகள் மற்றும் கடைகளிலும் விற்கின்றனர்.

இந்த சினிமா தொழிலை வளர்ச்சி பெற உதவுமாறு மேலும் இத்திருட்டு வி.சி.டிக்களை தயாரித்து விற்கும் கும்பலை பிடிக்க உதவுமாறு கேட்டு கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்