முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டாக் வெற்றி: ரோகித் சர்மா, ஜடேஜாவுக்கு பாராட்டு

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

கட்டாக், டிச. 1 - மே.இ.தீவு அணிக்கு எதிராக கட்டாக்கில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி எதிர்பாராத வெற்றி யைப் பெற்றது. இதற்கு ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோரின் சிறப்பான ஆட்டமே காரணம் என்று கேப்டன் சேவாக் புகழ்ந்துள்ளார்.  இந்தியா மற்றும் மே.இ.தீவு அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி கட்டாக்கில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய மே.இ.தீவு அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்னை எடுத் தது. 

அடுத்து இந்தியா ஆடத் தொடங்கியது. வெற்றி பெற 212 ரன் தேவை. இது மிக எளிதான இலக்கு. ஆனால் இந்தியாவுக்கு இந்த ஸ்கோர் கடி னமாக மாறிவிட்டது. இந்த ஆடுகளம் பந்து வீச்சிற்கு ஏதுவாக மாறி யது. 

முதலில் ஆடிய மே.இ.தீவு வீரர்கள் போலவே இந்திய வீரர்களும் அடு த்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதே நேரம் ரன்களையும் விரைவாக குவிக்க முடியவில்லை. 

தொடக்க கட்டத்தில் இந்தியா எப்படியும் வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் கடைசி கட்டத்தில் அந்த நம்பிக்கை கரைந்தது. இந்தியா ரன் எடுக்க திணறியது. 

இருந்த போதிலும், கடைசி விக்கெட்டிற்கு ஆடிய பந்து வீச்சாளர்கள் வருண் ஆரோனும், உமேஷ் யாதவும் அணியை மிகுந்த சிரமத்துடன் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 

இவர்களால் சிறப்பாக ஆட முடியவில்லை. இந்த விஷயத்தில் அதிர் ஷ்டம் கைகொடுத்தது என்றே சொல்ல வேண்டும். முன்னதாக ரோகி த் சர்மாவும், ஜடேஜாவு தான் நன்றாக ஆடினார்கள். 

ரோகித் சர்மா 72 ரன்களைச் சேர்த்தார். ரவீந்திர ஜடேஜா38 ரன்களை எடுத்தார். மற்றவர்கள் மிகக் குறைந்த ரன்களில் அவுட் ஆனார்கள். இந்த இருவரையும் தற்காலிக கேப்டன் சேவாக் பாராட்டி உள்ளார். 

ரோகித் சர்மாவும், ஜடேஜாவும் 6 -வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்து நன்றாக ஆடினார்கள். அந்த இருவரும் களத்தில் நிற்கும் வரை வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. 

ஆனால் அவர்கள் அவுட் ஆன பிறகு, வாய்ப்பு திசை மாறியது. இருந் தாலும், நாம் வெற்றி பெற்று விட்டோம். இப்போது, நாம் செய்த தவறுகளை அடுத்த போட்டியில் திருத்திக் கொள்வோம் என்று கூறி னார். 

கட்டாக் போட்டியின் ஆட்டநாயகனாக ரோகித் சர்மா தேர்வு செய்ய ப்பட்டார். அடுத்த போட்டி வரும் 2 -ம் தேதி (நாளை)ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம் நகரில் பகலிரவு ஆட்டமாக நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்