முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் பல்கலை: எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமம் மறுப்பு

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.1 - இலங்கையில் எஸ்.ஆர்.எம். குழுமம் பல்கலைக்கழகம் அமைக்க ஒப்பந்தம் என்னும் செய்தி முற்றிலும் கற்பனையானது, உண்மைக்கு மாறானது என்று எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள மறுப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-அனைவருக்கும் கல்வி வழங்கல் என்னும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எமது எஸ்.ஆர்.எம். கல்விக்குழுமம் சமூக உயர்வை எண்ணியே எப்போதும் செயல்பட்டு வருகிறது. தமிழர் எங்கு இருந்தாலும் அவர் எந்நிலையில் இருந்தாலும் அவரின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும் என்பதே எமது இலக்காகவும் அமைகிறது. எமது பல்கலைக்கழகத்தில் இலங்கைத் தமிழ் அகதிகளுக்குப் பல்லாண்டுகளாக இலவசமாகக் கல்விச் சேவையை அளிக்கின்றோம்.  இலங்கையில் நலிவுற்ற குடும்பத்தில் வாழும் தமிழ் மாணவர்களுக்குத் தேவையான உதவிகளை அவ்வப்போது செய்து வருகின்றோம்.  தமிழுக்காகவும் தமிழ் இனத்திற்காகவும் போராடும் ஒவ்வொரு தமிழுணர்வாளருக்கும் நாங்கள் எப்போதும் நேசக்கரம் நீnullட்டுவதையே எங்கள் வழக்கமாகக் கொண்டுள்ளோம். அவர்களுக்குத் தேவையான நிதிகளை வழங்குவதை எங்கள் கடமையாகவே செய்து வருகின்றோம். தமிழினம் ஓங்க வேண்டுமானால் தமிழ் ஓங்கவேண்டும் என்பதை உணர்ந்த நாங்கள் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் வேறு எப்பல்கலைக்கழகமும் செய்யாததை. தமிழ்ப்பேராயம் என்னும் அமைப்பைத் தொடங்கிச் செயல்படுத்துவதன் வாயிலாகத் தமிழ்ப்பணிகள் பலவற்றைச் செய்து வருகின்றோம். தமிழ் ஆராய்ச்சி, பண்பாடு, கலை போன்ற துறைகளோடு தலை சிறந்த தமிழறிஞர்களுக்கும் தக்க விருதுகளை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டும் வருகிறோம்.

இவ்வாறு தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும், தமிழ் உணர்வுக்காகவும் எங்கள் எஸ்.ஆர்.எம். குழுமம் செய்து வரும் பணிகளுக்குக் களங்கம் கற்பிக்கும் வகையில் தவறான செய்திகளைப் பரப்பும் தமிழ் மாணவர் பேரவை - தமிழ் இளைஞர் பேரவையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது. எஸ்.ஆர்.எம்.குழுமத்தின் புகழைப் பொறுத்துக்கொள்ள இயலாதவாகள், தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் செயல்பட்டுப் பெரும்பேறோடு விளங்கும் எமது குழுமத்தைக் குறைகூறி அதன் வாயிலாக விளம்பரம் மட்டுமே தேடிக் கொள்ள முயலுகின்றனர் என்பதை இப்பொய்யான செயல்பாட்டினால் எடுத்துக்காட்டியுள்ளனர். இலங்கையில் எஸ்.ஆர்.எம். குழுமம் பல்கலைக்கழகம் அமைக்க ஒப்பந்தம் என்னும் செய்தி முற்றிலும் கற்பனையானது. உண்மைக்கு மாறானது என்பதைத் தொவித்துக்கொள்கின்றோம். தமிழ்ச் சேவையே எங்கள் சேவை, தமிழர் முன்னேற்றமே எங்கள் முன்னேற்றம், தமிழின ஏற்றமே எங்கள் ஏற்றம். இவ்வாறு எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago